Thursday, December 31, 2020

48 -உழைப்பே உயர்வே தரும்


 

ராமுவும், சோமுவும் நண்பர்கள்.


ராமு கடினமான உழைப்பாளி.அதனால் வாழ்க்கையில் முன்னேறி ஊரார் பாராட்டும் வகையில் நடந்து வந்தான். 

ஆனால்..சோமு இதற்கு நேர் எதிர்.சரியான சோம்பேறியாய் இருந்தான்.எந்த ஒரு செயலையும் செய்யாமல்..ராமுவைப் பார்த்து பொறாமைப்படுவதுடன்..இறைவன் தன்னை மட்டும் முன்னேற விடாது..ஏன் சோதிக்கிறார் என வருந்துவான்.


ஒருநாள்  அவன் தன் ஆசிரியர் ஒருவரை சந்தித்தான்.அவரிடம் சோமு, ராமுவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சொல்லி..இறைவன் ஏன் என்னை மட்டும் சோதிக்கின்றான் என வருந்தினான்.


அவன் ஆசிரியர்..அதற்கானக் கராணத்தை சொல்லுமுன்..உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்..என சொல்ல ஆரம்பித்தார்.


"ஒரு சிற்பி..ஒரு தெய்வத்தின் சிலை செய்ய ஒரு பெரிய கல்லைத் தேர்ந்தெடுத்தான்.அப்போது அந்த கல்.."வேண்டாம்..என்னை விட்டு விடுங்கள்.நீங்கள் என்னை சுத்தியாலும், உளியாலும் அடிப்பீர்கள்.என்னால் அந்த வலியினைத் தாங்க முடியாது" என்றது.


"சரி" என்று சொன்ன சிற்பி,பின்னர் வேறு ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தான்.அந்தக் கல் ஒப்புக் கொண்டது.அதை செதுக்கி ஒரு தெய்வவுருவாக ஆக்கி கோயிலின் கருவறையில் வைத்தான்.அதற்கு தினமும் அபிஷேகமும், ஆராதனையும்,பூஜையும் தினமும் நட்க்க ஆரம்பித்தது.


"மாட்டேன்" என்ற கல் கோயிலின் வெளியே தினமும் தேங்காய் உடைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமும் அடி வாங்கத் தொடங்கியது.


நம் வாழ்விலும்..நாம் முன்னேற சிற்பி செதுக்கியக் கல் போல பல துன்பங்களியயும், வலியையும் தாங்க நேரிடும்.அதற்கு பயப்படாது வலிமையோடு எதிர் கொண்டால்..வாழ்வின் பிற்காலம் ஒளிமயமாக அமையும்" என்றார்.


அப்போதுதான் சோமு..தன சோம்பேறியாய் இருப்பதால்தான் ராமுவைப்போல வாழ்வில் முன்னேற முடியவில்லை என்பதை உணர்ந்து..அன்று முதல் சுறு சுறுப்பாய் செயல் பட ஆரம்பித்தான்.


சோம்பேரிகள் வாழ்வில் முன்னேறவே முடியாது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.