Tuesday, December 15, 2020

34. மூத்தோர் சொல் கேள்..(நீதிக்கதை)


 தன்னுடைய ஆடுகள் அனைத்தையும் புல்வெளி ஒன்றில் மேயவிட்டுவிட்டு அங்கிருந்த மர நிழலில் சற்றே கண்ணயர்ந்தான் கண்ணன்.

அப்போது நரி ஒன்று அங்கு வந்தது.கொழுத்து இருந்த ஆடுகளப்பார்த்து அதன் நாக்கில் எச்சில் ஊறியது.இதில் ஒரு ஆட்டை சிங்கராஜாவிற்கு கொடுத்தால் அது நம்மை பாராட்டுவதோடு எஞ்சிய ஆட்டு இறைச்சியையும்  தான் சாப்பிடலாமே என நரி ஆசைப்பட்டது.

தனக்கு  உரிய தந்திர குணத்துடன் ...ஒரு கொழு கொழு ஆட்டுக்குட்டியிடம் சென்று" இந்தஇடத்து காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டு இருக்கிறாயே..என்னுடன் வா..இளம் புல் இருக்குமிடம் காட்டுகின்றேன் அதைத்தின்று அருகில் இருக்கும் ஓடைத்தண்ணீரை குடித்தால் எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்றது.

"நமக்கு முன்பின் தெரியாதவர்கள் அழைத்தால் அவர்களுடன் எங்கும் போகக்கூடாது என்று அம்மா அறிவுரை சொல்லியிருந்ததை மறந்து ஆட்டுக்குட்டி நரியுடன் சென்றது.

அப்போதுதான் கண் விழித்தக் கண்ணன்...நரியுடன் ஆட்டுக்குட்டி செல்வதைப்பார்த்து....நரியை அடித்து விரட்டினான்.

நடந்ததை அறிந்த ஆட்டுக்குட்டியின் தாய் "நல்ல வேளை...கண்ணன் பார்த்தான்....நான் சொன்னதை மறந்து நீ நரியுடன் சென்றிருந்தால் அது உன்னை அடித்து தின்றிருக்கும் என்று கூறி ' எப்போதும் அம்மா,அப்பா சொல்வதைக்கேட்டு அதன்படி நடந்து கொண்டால் யாருக்கும் துன்பம் வராது.நான் சொன்னபடி முன்பின் தெரியாத நரியுடன் நீ செல்லலாமா'என்றது.

ஆட்டுகுட்டியும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டது.

நாமும் நம்மை விட பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் நம்மை எந்த துன்பமும் எப்போதும் அண்டாது.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு நீதிக்கதை.

தொடரட்டும் பதிவுகள்.

Kanchana Radhakrishnan said...

நன்றி வெங்கட் நாகராஜன்