Friday, December 18, 2020

35. உன் வலிமையை உணர்...(நீதிக்கதை)

 


காலை நேரம்....நரி ஒன்று கிழக்கு திசையிலிருந்து  மேற்கு நோக்கி சென்றது.அப்போது  கிழக்கிலிருந்து வந்த சூர்யஒளியில் அதன் நிழல் வெகு நீளமாக பெரிதாகத் தெரிந்தது.

நரிக்கு ஒரே சந்தோஷம்.தான் மிகப்பெரியதாக வளர்ந்து விட்டதாகவும் இனி காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விட தான் பெரியவன் என எண்ணியது.

செல்லும் வழியில் எதிரில் சிங்கத்தை பார்த்தது.அது அப்போதுதான் இரை சாப்பிட்டுவிட்டு வந்ததால் .. நரியை கண்டும் காணாதது போல இருந்தது.

நரியோ சிங்கம் தன் உருவத்தை பார்த்து பயந்ததாக எண்ணியது.அதனால் சிங்கத்திடம் ' இனிமேல் காட்டுக்கு ராஜா நான் தான் 'என்றது.

சிங்கமோ கோபத்துடன் ,'நீ என்ன பிதற்றுகிறாய்.எனக்கு பல முறை இரைக்காக  விலங்குகளை ஏமாற்றி அழைத்து வந்திருக்காய் என்பதால் உன்னை மன்னிக்கிறேன்.இங்கிருந்து போய் விடு' என்றது.

அதற்குள் மதிய நேரம் வர உச்சி வெய்யிலில்  நரியின் நிழல் குறைந்து  அதன் உண்மையான அளவே தெரிந்தது.

அப்போதுதான் சூர்ய ஒளியால் தான் காலையில் தன் உருவம் பெரிதாக தெரிந்தது' என்பதைஉணர்ந்தது.

' நல்லவேளை  .. சிங்கம் நம்மை மன்னித்து விட்டது என ஓடி ஒளிந்தது,

முட்டாள்தனமாக நம்மை பற்றி தெரியாது நம்மைபெரிதாக எண்ணக்கூடாது என நரி உணர்ந்தது.




2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் நீதிக்கதை. இந்த நரி போல தான் இங்கே பல மனிதர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

பதிவுகள் தொடரட்டும்.

Kanchana Radhakrishnan said...

Thanks Venkat Nagaraj for your comment.