Wednesday, December 30, 2020

47. ' வீண் சண்டை " (நீதிக்கதை)

 ஆந்த வருடம் மழையே இல்லை.எங்கும் வறட்சி. அந்த வறட்சி காடுகளிலும் தெரிந்தது.அப்படிப்பட்ட ஒரு காட்டில் வசித்து வந்த பெரும்பான்மை விலங்குகள்... வேறு காடு தேடிச்சென்றன.இதனால் காட்டில் இருந்த மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது.

அதனால்...அந்த காட்டில் இருந்த சிங்கம் ஒன்றும்...கரடி ஒன்றும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டன.இருவரும் வேட்டையாடிய இரையை சமமாக பிரித்துக் கொள்ளவேண்டுமென.

ஒரு நாள் இரண்டும் வேட்டைக்கு செல்கையில் கால் ஒடிந்த ஒரு சிறு மான் குட்டி வழியில் படுத்திருப்பதைப் பார்த்தனர்.இன்று உணவு கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தன.

இப்போது சிங்கம் மானை அடித்து தான் வயிற்றுப்பகுதியை உண்பதாகக் கூறியது.ஆனால் கரடியோ 'மானின் வயிற்றுப்பகுதி தனக்குத்தான்' என்றது.

மானைப் பங்கு போடுவதில் சிங்கத்திற்கும் கரடிக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது.இரண்டும் சண்டைபோட்டு ஒரு கட்ட்த்தில் களைப்படைந்து படுத்து விட்டன.

இதையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நரி ஒன்று...ஓடி வந்து இறந்து கிடந்த மானை தனக்கு 

 உணவாக தூக்கி சென்று விட்டது.

சிங்கமும் கரடியும் தங்கள் வேட்டையில் கிடைத்ததை சண்டையின்றி பங்கு போட்டுக்கொண்டிருந்தால் இரையை இழந்திருக்காது.

'வீண் சண்டை'...இரு தரப்பினருக்கும் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளது.



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்