ஓரு ஊரில் சோமசுந்தரம் என்ற பணக்காரன் ஒருவன் இருந்தான்.அவன் மளிகைக்கடை ஒன்று நடத்திவந்தான்.அவன் ஊர் மக்களை ஏமாற்றியும் ,எடை குறைவாகவும் சாமான்களைக் கொடுத்து பெரும் பணம் ஈட்டி வந்தான்.பேராசைக்காரனாகவும் இருந்தான்.
ஒரு நாள் தன் கடைக்கு மளிகைசாமானகள் வாங்கிவர அடுத்த ஊருக்கு செல்லும்போதுகையில் பணம் ஐம்பதாயிரத்தை வழியில் எங்கோ தவறவிட்டான். அதை அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பத்து சதவிதம் அதாவது ரூபாய் ஐயாயிரம் பரிசளிப்பதாக ஊர் முழுவதும் தண்டோரா போட்டான்.
ராமன் என்ற ஒர் ஏழை விவசாயி தெருவில் நடந்துசென்றபோது அந்தப் பணப்பை கிடைத்தது.சோமசுந்தரத்தின் பை அது என்று தெரிந்து அவனிடம் கொடுத்தான்.
பேராசைக்காரனான சோமசுந்தரம் அறிவித்த பரிசுத்தொகையை கொடுக்காமல் ராமனைப் பார்த்து " பணம் சரியாக இருக்கிறது ஆனால் இதில் என் வைர மோதிரம் இருந்தது.அது எங்கே? என்றான்.
ராமனோ தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூற வழக்கு அந்த ஊர் அரசனிடம் சென்றது.
சோமசுந்தரத்தின் பேராசையை அறிந்த அரசன் "சோமாசுந்தரம் ...உன் பையில் பணத்துடன் வைர மோதிரம் இருந்ததா' என்று வினவ. சோமசுந்தரமும் 'ஆமாம் மன்னா' என்றான்,உடன் அரசன்; ராமன் கண்டெடுத்த பையில் பணம் இருந்தது ஆனால் மோதிரம் இல்லை.ஆகவே இது உன் பையாக இருக்கமுடியாது.யாருடையது என
தெரியாத நிலையில் பையைகண்டெடுத்த ராமனுக்கத் தான் சொந்தம் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றான்.
சோமசுந்தரம் தன் பேராசையால் மொத்த பணத்தையும் இழந்தான்.
4 comments:
நல்ல தீர்ப்பு. சிறப்பான கதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அருமை அம்மா...
நன்றி வெங்கட் நாகராஜ்,திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment