கந்தன் என்பவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை மேய்ச்சலுக்குஅழைத்து சென்று இரவு கொட்டிலில் அடைப்பான்.
ஆனால்..சில நாட்களாக தினமும் ஒரு ஆடு காணாமல் போய்க் கொண்டிருந்தது.இரவு சரியான காவல் இல்லாததால் ஏதோ விலங்கு ஒன்று வந்து ஆட்டை அடித்து இழுத்து சென்று எங்கேயாவது போட்டு தின்றிருக்கலாம் என கந்தன் நினைத்தான்.
அதனால் ஒரு நாள் இரவு மறைந்திருந்து கவனித்தான்.அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆடு ஒன்றைக் கொன்று இழுத்துச் சென்றதை கவனித்தான்.
அடுத்த நாள் இரு வேட்டை நாய்களை வாங்கி இரவு காவல் காக்க வைத்தான்.ஆனால் அப்போதும் ஆடு காணாமல் போய்கொண்டிருந்தது.
முன்னர் செய்தது போல இம்முறையும் மறைந்திருந்து கவனித்தான்.
ஆனால் இம்முறை ஓநாய் வந்து ஆட்டை அடித்து இழுத்துச் சென்று...சாப்பிட்டுவிட்டு மிச்சம் கொஞ்சம் மாமிசத்தை வேட்டை நாய்களுக்கு கொடுத்ததை பார்த்தான்.
இதற்கு என்ன செய்வது என வருத்தத்துடன் இருந்தபோது..அடுத்த ஊரில் தன் சித்தப்பா..அவனைப்போலவே பல ஆடுகளை வைத்து பராமரித்து வந்தது நினைவுக்கு வர ...அவரிடம் வந்து நடந்ததைக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட சித்தப்பா..."காவலுக்காக நீ வைத்துள்ள வேட்டை நாய்கள் ஏன் உனக்கு எதிராக நடந்து கொள்கிறது என நீ யோசித்தாயா? நீ அவற்றுக்கு போடும் உணவு போதவில்லை.ஆகவே அவை தங்கள் பசியைப் போக்கிக் கொள்ள வழிதெரியாது ஓநாய்க்கு உதவி தங்கள் பசியை தீர்த்துக் கொண்டன.
நம்மிடம் நமக்காக வேலை செய்பவர்களுக்கு வயிறார சாப்பாடும் ..சம்பளமும் கொடுக்கவேண்டும்.அப்பொழுதுதான் அவர்கள் நமக்கு உண்மையாக இருப்பார்கள் என்றர்.
அடுத்தநாள் கந்தன் வேட்டை நாய்களுக்கு தேவையான
உணவைக் கொடுக்க ..அவை ஓநாயை அங்கு மீண்டும் வராமல் ...தன் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தன.
4 comments:
அருமை...
நல்லதோர் கதை.
நன்றி திண்டுக்கல் தனபாலன், வெங்கட் நாகராஜன்
Post a Comment