Saturday, February 10, 2018

8 -உழைப்பே உயர்வு தரும்



சரவணனும், கந்தனும் நண்பர்கள்.
சரவணன் எல்லோரிடமும் இரக்கக் குணம் கொண்டவன்.கந்தனோ, யார்..யாருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை அறிந்தவன்

ஒருநாள், வாலிப வயது பிச்சைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து , தனக்கு பசிப்பதாகக் கூறி பிச்சைக் கேட்டான்.கந்தன் அவனிடம், "உனக்கு இளம் வயது.ஏன் பிச்சை எடுக்கிறாய்? ஏதேனும் வேலை செய்து பிழைக்கலாமே!' என திட்டி அனுப்பி விட்டான்.

ஆனால், சரவணனோ அவனைக் கூப்பிட்டு, சிறிது பணம் தந்து அனுப்பினான்

அடுத்தநாளும் இப்படியே நடந்தது

மூன்றாம் நாள், அவன் வந்த போது, கந்தன் அவனை தர தர  என இழுத்துக் கொண்டு ஒரு நதிக்கரைக்கு வந்தான்.அவனிடம் ஒரு தூண்டிலைக் கொடுத்து, "இனி நீ இந்தத் தூண்டில் மூலம் மீன் பிடித்து, அதை விற்று, உழைத்து உண்ண வேண்டும்." என்று கோபத்துடன் கூறிச் சென்றான்.

பிறகு அவர்கள் அந்தப் பிச்சைக்காரனப் பார்க்கவேயில்லை.

சில வருடங்கள் ஓடின..

ஒருநாள் பணக்கரர் ஒருவர் கந்தனையும், சரவணனையும் பார்க்க வந்தார்.

அவர் யார் ?என அவர்களூக்குத் தெரியவில்லை.

அவரே சொன்னார்"ஐயா''நீங்கள் தூண்டில் கொடுத்து உழைத்துப் பிழைக்கச் சொன்னீர்களே! அந்தப் பிச்சைக்காரன் நான்.அன்றுமுதல் உழைத்தேன்.பணக்காரன் ஆனேன்.உழைப்புத்தான் உயர்வு தரும் என உணர்ந்தேன்.
அதற்கு உங்களுக்கு நன்றி என்றதுடன் கந்தனுக்கும் சரவணனுக்கும் சில பரிசுகள் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இதிலிருந்து சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது.உழைப்பே உயர்வு தரும் என உணருவோமாக

No comments: