Monday, February 12, 2018

10- பிறவிக்குணம்




ஒரு காட்டிற்குள், அமைதியாக, அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

அந்நதியில், எப்போதும் அன்னப்பறவைகள் நீந்தி விளையாடி வந்தன.நதிக்கரையில், சில காகங்கள் வசித்து வந்தன.

அந்த காகங்கள் இறந்த சில பறவைகளை கொத்தித் தின்று வாழ்ந்து வந்தன.

ஒரு காகத்திற்கு, அன்னப்பறவை ஒன்றின் நட்புக் கிடைத்தது.

நல்லதையும், தீயவனவற்றையும் பிரித்துப் பார்ப்பதில் அன்னப்பறவை பெயர்ப் பெற்றது.

அன்னப்பறவை காகத்தினிடம் "நண்பா! நீயும் எங்களைப் போல,நல்லதை மட்டுமே பிரித்து உண்.ஏன் இறந்து அழுகிக் கிடக்கும் பறவைகளை உண்ணுகிறாய்?" என்றது.

காகமும், அன்னப்பறவை சொன்னதில் உள்ள நன்மையை உணர்ந்து, 'இனி அப்படியே நடப்பதாக உறுதி அளித்தது"

அந்த சமயத்தில்..எங்கிருந்தோ அழுகிய நாற்றம் வர . அந்த நாற்றத்தினால் ஈர்க்கப்பட்ட காகம் அங்கு பறந்து சென்று பார்த்தது.

ஒரு எலி ஒன்று அழுகிய நிலையில் செத்துக் கிடந்தது.

உடனே, தான் நண்பன் அன்னப்பறவைக்கு அளித்திருந்த உறுதி மொழியை மறந்து, எலியைக் கொத்தி உண்ண ஆரம்பித்தது.

அதைப் பார்த்த அன்னம், சிலரது பிறவிக் குணத்தை மாற்ற முடியாது என்று உணர்ந்தது..

No comments: