Friday, February 9, 2018

7 - விட்டுக் கொடுக்கும் மனம்


அந்த ஊரின் நடுவே ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றைக் கடக்க ஒரு பாலம் ஒன்றிருந்தது.அது மிகவும் குறுகிய பாலம்.ஒருவர் போனால் , ஒருவர் வர முடியாத அளவிற்குக் குறுகியது,

ஒருநாள் பாலத்தின் ஒருமுனையிலிருந்து ஆடு ஒன்று பாலத்தைக் கடக்க எண்ணி பாலத்தில் நடக்க ஆரம்பித்தது

அதே நேரத்தில்,எதிர்முனையில் இருந்தும்,ஆற்றினைக் கடக்க பாலத்தில் ஒரு ஆடு வர ஆரம்பித்தது.

இரு ஆடுகளும், நடு பாலத்தில் சந்தித்தன

முதல் ஆடு, "வழி விடு.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்"என்றது

எதிர் முனையில் இருந்து வந்த மற்ற ஆடோ, "முடியாது.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்..நீ வழிவிடு" என்றது.

இரண்டு ஆடுகளும். ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காமல் ..நடுப்பாலத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
 ஒருகட்டத்தில், ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, கால்கள்  தடுமாற, பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தன.இரு ஆடுகளையும் ஆறு அடித்துச் சென்றது.

ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் தங்கள் உயிரை இழந்தன.

வாழ்விலும், நாம் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கினைக் கொண்டால், வாழ்வு சிறப்பாக அமையும்.

No comments: