Wednesday, February 7, 2018

5 - முட்டாள் தோழன்


நரியூர் என்ற ஊரில் அரசன் ஒருவன் அரசாண்டு வந்தான்.அவனுக்கு ஒருவர் ஒரு நாள் குரங்கு ஒன்றை பரிசாக அளித்தார்.

அந்த குரங்கும், அரசனிடம் மிகவும் பாசமாய் இருந்தது.
அரசர் உலாவச் செல்லும் போதெல்லாம், குரங்கையும் உடன் கூட்டிச் செல்வார்

ஒருநாள், அப்படிச் செல்லும் போது, முட்புதர் ஒன்றில் இருந்த பாம்பு ஒன்று அரசரைக்  கடிக்க இருந்தது.அதைக் கண்ட குரங்கு, அந்தப் பாம்புடன் சண்டையிட்டு அதைக் கொன்றது.
மன்னனுக்கோ மகிழ்ச்சி.குரங்கு, தன் உயிரைக் காத்தது என அனைத்து மந்திரிகளிடமும் சொல்லி, குரங்கின் விசுவாசத்தைப் போற்றினான்.
தவிர்த்து, அன்று முதல் குரங்கை தன் பாதுகாவலராக அமர்த்தினான்.

அமைச்சர்கள் அனைவரும் அரசனிடம்' அரசே! என்ன இருந்தாலும் குரங்கு ஒரு விலங்கு, அதற்கு பகுத்தறிவோ,முடிவெடுக்கும் திறனோ இருக்காது" என்றனர்.
ஆனால் , அரசனோ, "குரங்கிற்கு, பாசமும், விசுவாசமும் உள்ளது.அது போதும்" என்றான்.
அன்றுமுதல் குரங்கு அரசனின் பாதுகாவலன் ஆகியது.

ஒருநாள், அரசனுக்கு தூக்கம் வந்தது,மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவன், குரங்கினிடம், "நான் தூங்கப் போகிறேன்.யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்" என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

அரசன் தூங்க ஆரம்பித்ததும், ஈ ஒன்று பறந்து வந்து ராஜாவின் மூக்கின் மீது அமர்ந்தது.அதை விரட்டி அடித்த குரங்கு, "மன்னன் தூங்குகிறார்.அவரை இம்சித்தால் கொன்றுவிடுவேன் உன்னை" என ஈயை எச்சரித்தது.
அதை பொருட்படுத்தாத ஈ, இம்முறை அரசனின் கழுத்தில் அமர்ந்தது.

தூங்கும் அரசனை இம்சிக்கும் ஈ மீது கோபம் கொண்ட குரங்கு, அரசனின் வாளை எடுத்து, அவரது கழுத்தில் அமர்ந்திருந்த ஈ ம் மீது ஒரே போடாக போட்டது.
வாள், மன்னனின் கழுத்தில் பாய்ந்து மன்னன் உயிர் நீத்தான்.

முட்டாளை பாதுகாவலனாக அமர்த்தியதால் மன்னன் உயிரிழக்க நேரிட்டது.

ஆகவே, குழந்தைகளே! நாமும் முட்டாள்களை நண்பனாகக் கொள்ளக் கூடாது

No comments: