Thursday, February 8, 2018

6 - நட்பின் பெருமை


ராமனும், குமரனும்  நண்பர்கள்.
இருவரும் ஒரே பள்ளியில், ஒரே பிரிவில் நான் காம் வகுப்பு படித்து வந்தனர்
ராமன், காலையில் விரைவில் எழுந்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து முடித்து, சிறிது நேரம் பள்ளிப் பாடங்களைப் படித்துவிட்டு, காலை உணவை அருந்திவிட்டு பள்ளி செல்வது வழக்கம்

ஆனால், குமரனோ ,நேர் எதிர்.
தாமதமாகத் தான் தினமும் எழுவான்.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, அரை குறையாகக் குளித்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு ஓடுவான்

ஒருநாள் குமரன், மிகவும் தாமதமாக எழுந்தான்.பள்ளிக்கோ நேரம் ஆகிறது.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து பள்ளிக்கு விரைந்தான்

முதல் பீரியட் முடிந்ததும்...பொறுக்க முடியாத்தால் அவன் கால்சட்டை நனைந்தது.

அதைப்பார்த்த ராமன் உடனடியாக தன்னிடமிருந்த தண்ணீர்
பாட்டிலைத் திறந்து..ஏதேச்சையாகத் தண்ணீர் கொட்டுவது போல குமரனின் கால்சட்டையில் தண்ணீரைக் கொட்டினான்
மற்ற மாணவர்கள் பார்த்த போது, தான் தவறி தண்ணீரைக் கொட்டிவிட்டதாகக் குறி குமரனிடம் மன்னிப்புக் கேட்டான்.

மாலையில், பள்ளி முடிந்ததும், குமரன் , ராமனிடம் வந்து "ராமா..என் கால்சட்டை நனைந்ததை நீ பார்த்துவிட்டாய்.மற்றவர்கள் பார்த்து..என்னைக் கேலி செய்யப் போகிறார்களே என்று உடனே தண்ணீரைக் கொட்டி, தண்ணீரினால் என் கால்சட்டை நனைந்தது போல செய்து விட்டாய்.உன் இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றான்.

ராமனும் குமரனைப் பார்த்து, "குமரா! இதற்கான காரணம் என்ன தெரியுமா? நீ தினமும் தாமதமாக எழுவதால்...உன்னால் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய இயலவில்லை.நீயும் என்னைப் போல சீக்கிரம் எழுந்தால், ஆரவாரமில்லாது எல்லா வேலைகளையும் செய்யலாம் இல்லையா?" என்றான்.

குமரனும், தன் தவறினை உணர்ந்து, அடுத்த நாள் முதல் ராமனை பின் பற்ற ஆரம்பித்தான்.

இப்போது, அவர்கள் வகுப்பில் முதல் மாணவர்கள் அவர்களே ஆகும்.



No comments: