Sunday, April 29, 2018

26 - நல்ல நண்பர்கள் வேண்டும்



வயல்களில் பறவைகள் வந்து தானியங்களை நாசம் செய்தன.அதனால், வயல்களுக்கு சொந்தக்காரனான விவசாயி பறவிகளைப் பிடிக்க வலையைக் கட்டினான்.

வலையில் பல பறவைகல் மாட்டிக்கொண்டன. அவற்றோடு ஒரு கொக்கும் மாட்டிக் கொண்டது.

விவசாயி வந்து, வலையில் அகப்பட்டிருந்த பறவைகளைப் பிடித்தான்.தன்னை விடுவிக்குமாறு கொக்கு மன்றாடியது.

" நீ பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டாய்.நான் பறவை அல்லவே! என்னை விடுவிப்பதுதானே நியாயம்?" என்றது

அதற்கு விவசாயி, "நீ சொல்வது முற்றிலும் உண்மை,ஆனால், நீ கெட்டவர்களோடு அகப்பட்டாய்,கெட்டவர்களின் கூட்டுறவு உனக்கு இருக்கிறபடியால் அவர்களுக்கு க் கிடைக்கிற தண்டனை உனக்கும் கிடைக்க வேண்டியதுதான்" என்று சொன்னான்

ஒவ்வொருவரும், அவர்கள் நண்பர்களைக் கொண்டே மதிப்பிடப்படுவார்கள்

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

நன்றி சார்