Thursday, April 26, 2018

25 - மானும்..நரியும்



ஒரு நரி கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து விட்டது.
மேலே வர முடியாமல் தவித்தது.
அந்தப் பகக்மாக வந்த மான் ஒன்று, கிணற்றுக்குள் ஏதோ சப்தம் கேட்பதைக் கேட்டு, கிணற்றை எட்டிப் பார்த்தது.

அதனுள், நரி இருப்பதைப் பார்த்து விட்டு, "நரியாரே! கிணற்றினுள் என்ன செய்கிறீர்கள்? " என வினவியது.

மான் இப்படிக் கேட்டதும், தந்திரக்கார நரி, "இந்த கிணற்று நீர் இளநீர் போன்று மிகவும் சுவையானது.எனக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம், இக்கிணற்றினுள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வேன்" என்று பொய் சொல்லியது.

மானிற்கும், உடனே அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.உடனே, அதுவும் கிணற்றினுள் குதித்தது.

நல்ல சமயத்தை எதிர்ப்பார்த்திருந்த நரி, அந்த மானின் கொம்புகளைப் பிடித்து, அதன் மீது ஏறி வெளியே குதித்து தப்பி ஓடியது.

அப்போதுதான் நரியின் தந்திரத்தை உணர்ந்தது மான்.இப்போது கிணற்றினுள் இருந்து தன்னால்வெளியே
 வர முடியாது, "யாராவது என்னக் காப்பாற்றுங்கள்" எனக் கதற ஆரம்பித்தது.

நாம் யாருக்கு உதவி செய்தாலும், அந்த உதவிக்கு அந்த நபர் தகுதியானவர்தானா என யோசித்து செய்ய வேண்டும்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

யாருக்கு உதவி செய்யப் போகிறோம் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

thanks sir