Thursday, April 19, 2018

21- முடியாத செயலில் ஈடுபடக்கூடாது



ஒரு பாழடைந்த வீட்டில் ஏராளமான எலிகள் வாழ்ந்து வந்தன.ஒருநாள் பூனை ஒன்று அந்த வீட்டில் புகுந்தது.பூனை தினமும் எலிகளை வேட்டையாடித் தின்றது.எலிகள் மிகவும் பயந்தன.அவைகள் ஒன்றுகூடி இந்த அபாயத்திலிருந்து தப்புவது எப்படி? என யோசித்தன.

அப்போது ஒரு பெரிய எலி ஒரு பெரிய மணியைக் கொண்டு வந்து எலிகளை நோக்கி,"நண்பர்களே! நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புது யோசனையுடன் வந்துள்ளேன்.இந்த மணியை பூனையின் கழுத்தில் கட்டிவிட்டால், பூனை வரும்போது மணியோசை முன்னதாகக் கேட்கும்.அப்போது உடனே நாம் தப்பித்துவிடலாம்" என்றது.இதைக் கேட்ட எலைகள் அனைத்தும் மகிழ்ந்தன.மிகவும் அற்புதமான யோசனை என பெரிய எலியைப் பாராட்டின.

சிறிது நேரம் கழித்து ஒரு எலி, "இந்த மணியை யார் பூனையில் கழுத்தில் கட்டுவது?" என்றது
இதைக் கேட்டதும் அனைத்து எலிகளின் உற்சாகமும் குறைந்து போனது.யாரால் மணியை தைரியமாகச் சென்று பூனையின் கழுத்தில் கட்டமுடியும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே,"மியாவ்" என பூனை வரும் சப்தம் கேட்டது.அனைத்து எலிகளும் பயந்து எல்லா திசையிலும் ஒடி ஒளிந்தன.

இயலாத, முடியாத செயலில் நாம் இடுபடக்கூடாது என்பதே இக்கதையின் மூலம் நாம் அறியும் செய்தியாகும்  

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

யார் பூனைக்கு மணி கட்டுவது? நல்ல பகிர்வு. நன்றி.

Kanchana Radhakrishnan said...

நன்றி வெங்கட் நாகராஜ்