Monday, April 23, 2018

23-நமக்குள் ஒற்றுமை தேவை



இரண்டு பூனைகள் ஒரு வீட்டில் அப்பம் ஒன்றினைத் திருடின.அதனைப் பங்குப் போடுவதில், இரண்டினுக்கும் சண்டை வந்தது.

குரங்கு ஒன்றிடம் மத்தியஸ்தம் செய்ய சென்றன.
குரங்கு ஒரு தராசினைக் கொணர்ந்து, அப்பத்தை இரு துண்டுகளாக்கி இரண்டு தட்டுகளிலும் போட்டன.தராசைத் தூக்கிப் பார்த்த போது ஒரு தட்டு கீழே சாய்ந்தது.அதிலிருந்த அப்பத்துண்டை ஒரு கடி கடித்து விழுங்கியது.
இப்போரு, மற்றொரு தட்டு கீழே சாய்ந்த்து.அதிலிருந்து அப்பத்தை எடுத்து ஒரு கடி கடித்து விழுங்கியது.
இப்படி மாற்றி, மாற்றி செய்தது,இப்போது,அப்பத்துண்டுகளின் அளவு குறைந்து வருவதை பூனைகள் கண்டன
.
கடைசியில் தங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என உணர்ந்து, கிடைத்த வரை போதும் என,குரங்கிடம் "மத்தியஸ்தம் வேண்டாம்.அப்பங்களைக் கொடுத்து விடு:" என்றன.

குரங்கு ஒப்புக் கொள்ளவில்லை.கடைசியில் இருந்த அப்பத் துண்டுகளை தன் கையில் எடுத்துக் கொண்டு"நியாயம் சொல்வது மிகவும் கடினம்.அதில் உங்களுக்காக நான் ஈடுபட்டதால்..மீதமுள்ள இரண்டு அப்பத்துண்டுகளை நான் என் வேலைக்குக் கூலியாக எடுத்து கொள்கிறேன்" என்றவாறு வாயில் போட்டு விழுங்கியது

எதுவாயினும் நமக்குள் சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாததால் நஷ்டம் நமக்குத்தான் என பூனைகள் உணர்ந்தன .நமக்குள் ஒற்றுமை தேவை என்றும் உணர்ந்தன

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.