Wednesday, April 18, 2018

20- பாத்திரமறிந்து உதவு



ஒரு ஆட்டு மந்தையினுள் புகுந்து ஆடுகளைஅடித்துக் கொல்ல முயன்றது ஓநாய் ஒன்று.

அந்த ஆட்டு மந்தையின் காவலாக இருந்த நாய்கள் ஓநாயைத் துரத்திப் பிடித்து நன்றாக அடித்துப் போட்டு விட்டன.

படுகாயம் அடைந்த ஓநாய் நடக்க முடியாமல் வேதனையுடன் ஓரிடத்தில் படுத்திருந்தது.அதற்குக் கடுமையான பசி வேறு.
அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு ஆடு சென்றுக் கொண்டிருந்தது.

ஓநாய் அந்த ஆட்டைக் கூப்பிட்டது.

அதனிடம், "நண்பா! எதிரிகளால் நான் காயப்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றேன்.தண்ணீர் தாகமாக உள்ளது.எனக்குக் கை கொடுத்து நீரோடை வரை அழைத்து செல்.நான் தாகத்தை தணித்துக் கொள்வேன்" என உருக்கமாகக் கேட்டது

ஓநாயின் கபட நாடகத்தை அறியாத ஆடு, அதன் மீது அனுதாபம் கொண்டு ,அது நடப்பதற்கு உதவ அதன் அருகே சென்றது.

கைக்கு எட்டும் தொலைவில் ஆடு வந்ததும் ஓநாய் அதன் மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்து கொண்டது

பிறர் துன்பப்படும் போது நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.

ஆனால், அதே நேரம், யாருக்கு உதவுகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

கருத்துள்ள பகிர்வு.

Kanchana Radhakrishnan said...

ந்ன்றி