Wednesday, April 26, 2023

37. வாத்தின் புத்திக் கூர்மை



37- வாத்துகளின் புத்தி கூர்மை



 ஒரு குளத்தின் அருகில் ஒரு ஆண் வாத்தும் பெண் வாத்தும் வசித்து வந்தன.

ஒரு நாள் பெண் வாத்து குளக்கரையில் இரண்டு  முட்டையிட்டது. அந்த முட்டைகளை  இரண்டு வாத்துகளும் கவனமாக பாதுகாத்து வந்தன.

அந்த குளத்தின் அருகே இருந்த மரம் ஒன்றில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.அதிலிருந்த பாம்பு இந்த முட்டைகளை பார்த்துவிட்டது.பாம்புக்கு முட்டைகளை எடுத்து உணவாக்கிகொள்ளவேண்டும் என்ற ஆசை  எழுந்தது.

வாத்துகள் இரண்டுக்கும் நல்ல பசி.அதனால் அவை இரண்டும் ஒரு இலையால் முட்டைகளை மூடி விட்டு குளத்தில் நீந்தி மீன்கள் சாப்பிட கிடைக்குமா என்று பார்த்தன. அந்த  சமயத்தில் பாம்பு வந்து அந்த முட்டைகளை ஒவ்வொன்றாக விழுங்கி விட்டது.

திரும்ப வந்த வாத்துகள் முட்டையை காணவில்லைஎன்றதும் மிகவும் வருத்தமடைந்தன.யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.சுற்று முற்றும் பார்த்ததில் பாம்பு புற்றினைக் கண்டதும் பாம்பு தான் எடுத்திருக்கும் என்று தீர்மானித்தன.

அடுத்த முறை மீண்டும் இரண்டு முட்டை போட்டது வாத்து.பின் இரண்டு வாத்துகளும் மரத்தில் மறைந்து கொண்டு பார்த்தன.அப்பொழுது பாம்பு வந்துகொண்டிருந்தது.அது முட்டையை எடுக்கும்போது வாத்து பாம்பிடம் "அவசரப்படாதே,நான் சொல்வதை  சற்று பொறுமையுடன் கேள்" என்றண.

"என்ன?" என்று கேட்டது? பாம்பு.

"நீ எங்கள் முட்டைகளை உணவாக்கிகொள்கிறாய்.எங்களுடைய குழந்தைகளை அழிக்கிறாய்.இங்கு இரண்டு முட்டைகள் தான் உள்ளது.பக்கத்து காட்டில் ஒரு மரத்தடியில் நிறைய முட்டைகள் உள்ளன.நீ விரும்பினால் நாங்கள் உன்னை அங்கு அழைத்து செல்கிறோம்" என்றன..

பாம்பும் அதிக உணவுக்கு ஆசைபட்டு சரி என்று சொல்லி அவைகளுடன் சென்றது.

அதற்கு முந்தின நாள் பருந்திடம் ஒருஇடத்தில் காத்திருக்கச்சொல்லி, தாங்கள் அதற்கு உணவாக பாம்பை அழைத்து  வருவதாக கூறியிருந்தன.

திட்டமிட்டபடி அந்த மரத்தடியில்  பருந்து காத்துக்கொண்டிருந்தது. வாத்துகள் பாம்புடன் வந்ததும் பருந்து பாம்பை கொத்தி தனக்கு உணவாக்கிகொண்டது.

தந்திரத்தால் தன்னை எதிரியிடம் காப்பாற்றிய பருந்துக்கு நன்றி கூறிவிட்டு தனது முட்டைகளை அடைகாக்க வாத்துகளும் சந்தோஷமாக திரும்பின.


No comments: