Monday, April 24, 2023

35. யோசித்து செய்.

35- யோசித்து செய்





அந்த கிராமத்தில் ஒரு  குளம் இருந்தது.அதில் மீன்களும் தவளைகளும் நிறைய இருந்தன.குளத்தின் அருகே உள்ள ஒரு மரப்பொந்தில் ஒரு  சுண்டெலி வசித்து வந்தது.சுண்டெலிக்கு தண்ணீரில் குதித்து விளையாட ஆசை.ஆனால் தன்னால்  முடியாது என்று அறிந்த சுண்டெலி அந்த குளத்தில் அடிக்கடி காணப்பட்ட தவளை ஒன்றின்  நட்பை  பெற்றது.இருவரும் மிகவும்  நண்பர்களாக  இருந்தனர்.

ஒரு நாள் சுண்டெலி தவளையிடம் ‘நண்பா ‘ எனக்கு தண்ணீரில் குதித்து விளையாடவேண்டும்’ என்று ஆசை.நீ எனக்கு உதவி செய்வாயா?" என்று கேட்டது.

தவளையும் "நாளைக்கு நான் நீ தண்ணீரில் விளையாடுவதற்கு உதவி செய்கிறேன்" என்றது.

அடுத்த நாள் தவளை வெகுநேரம் யோசித்தது.எப்படி சுண்டெலியை தண்ணீருக்குள் கொண்டு வருவது என்று தெரியவில்லை.சட்டென்று ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்தியது

அதன்படி தவளை ஒரு கயிற்றை எடுத்து அதனை தன் காலிலும் சுண்டலியின் காலிலும் சேர்த்து கட்டியது.இரண்டும் சேர்ந்தாற்போல் தண்ணீரில்   இறங்கியது.அப்பொழுது மேலே பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்று இவர்களை தாக்க வந்தது.உடன் தவளை தன்னையும் சுண்டெலியையும்  காப்பாற்றும் எண்ணத்தில் தண்ணீரில்  முழுவதுமாக இறங்கியது.தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்தது. அதன் உடல் மேலே மிதந்தது.

அதைப் பார்த்த பருந்து சுண்டெலியை தூக்க அதனுடன் கயிற்றால் கட்டப்பட்ட தவளையையும் சேர்த்து தூக்கியது.பருந்துக்கு உணவாக எலியும் தளையும் கிடைத்தது.

இதிலிருந்து நாம் பெ, அவர் சொல்வதை செய்யும்போது அதற்கான எதிர்பலன் என்னவாகும் என்று யோசித்து அதற்கேற்றபடி செயல்படவேண்டும்.










`

அதை 





lmஅதைஆஆஆஆஆஆஅathaiaaaaaaaஆஆ