Wednesday, April 26, 2023

36. செய்யும் தொழிலே தெய்வம்

 

36- செய்யும் தொழிலே தெய்வம்


மதுரையை ஆண்ட மன்னர்களுள் வீரபாண்டியன் என்ற அரசன் கலைகளில் ஆர்வம் உள்ளவர்.அவரது மனைவியும் அவரைப்போல கலைகளில் ரசனை உள்ளவள்.

ராணிக்கு தனது அந்தபுரத்தில் ஒரு அம்மனின் சிலை வடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.அவளுக்கு பூஜை வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உண்டு.

ராணியின் விருப்பத்திற்கேற்ப அரசன் கைதேர்ந்த சிற்பிகளை அழைத்து ஒரு அம்மன் சிலையை வடிவமைக்கச் சொன்னார்.வந்த சிற்பிகளில் அனுபவமிக்க சிற்பி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் ‘ஆறடி  உயரமுள்ள ஒரு அம்மன் சிலை  அந்தபுரத்தில் வடிவமைக்கவேண்டும்’ என்றார்.

சிற்பியும் அதற்கு ஒத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தார்.அரசரும், அரசியும் அவ்வப்பொழுது வந்து மேற்பார்வையிடுவது வழக்கம்.சில நாட்கள் கழித்து  மற்ற மந்திரிகள் அரசரிடம் சிலை முடியும் தறுவாயில் உள்ளது என்று கூற இருவரும் சிற்பக்கூடம் விரைந்தனர்.

அங்கு அவர்கள் முழுமையான சிலை  கீழே கிடக்க சிற்பி மீண்டும் ஒரு புது சிலையை செதுக்கிகொண்டிருந்தார். அதற்கு காரணம் கேட்ட அரசரிடம் சிற்பி  அம்மனின் மூக்கில் ஒரு பெரிய ஓட்டை விழுந்துவிட்டது.அதனால் தான் மீண்டும் செய்கிறேன் என்றார்.

அரசர் , "ஆறடி உயரத்தில் உள்ள சிலையில் சிறு தவறு இருந்தால் மற்ற்வர்களுக்கு தெரியாது,இதையே வைத்துக்கொள்ளலாமே "என்றார்.

அதற்கு சிற்பி அரசே ‘ என் மனம் ஒப்பவில்லை’.  ஒரு வேலையை நம்மிடம் ஒப்படைப்பவர்களை நாம் ஏமாற்றக்கூடாது.அப்படி ஏமாற்றுவது அவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் நம் மனசாட்சிக்கு தெரியும்மேலும்  நாம் ‘செய்யும் தொழிலே  தெய்வம்”அந்த தெய்வத்தை ஏமாற்றுவது தொழில் தர்மம்  இல்லை."என்றார்.

அரசர் சிற்பியின் நேர்மையை பாராட்டி அவருக்கு அரசவையில் முக்கியமான  பதவி கொடுத்தார்.