Monday, May 22, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 6- கனிகொடா அத்திமரம்

(பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்க இருப்பதை விளக்கும் கதை இது.)

ஒருவர் தமது திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார்.அவர் வந்து அதில் கனியைத் தேடிய போது எதையும் காணவில்லை

உடனே , அவர் தோட்டக்காரரைக் கூப்பிட்டு, " மூன்று ஆண்டுகளாக இம்மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்.ஆனால் எதையும் காணவில்லை.ஆகவே இம்மரத்தை வெட்டி விடுங்கள்.இது ஏன் இடத்தை வீணாய் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்றார்

ஆனால், தோட்டக்காரரஓ, "இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்.நான் இதற்கான எருக்களைப் போட்டு கொத்தி விடுகிறேன்.அப்படிச் செய்தும், அடுத்த ஆண்டும் கனையைக் கொடுக்காவிட்டால் வெட்டிவிடலாம்" என்றார்.

இதில், தோட்டஉரிமையாளர் கடவுளாகும். தோட்டக்காரர் பரிசுத்த ஆவியாகும்.ஒரு மனிதனுக்கு கடவுள் அவனது பாவ வழிகளை விட்டுத் திரும்ப பல சந்தர்ப்பங்களைக் கொடுப்பார்.ஆனால் பலன் இல்லாது போனால் கனி கொடாத அத்திமரம் வெட்டப்பட்டது போல நரகத்தில் தள்ளப்படுவார்  

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Pandian Subramaniam said...

பலனற்ற வாழ்க்கை பயனற்றது.
சிறந்த கருத்து.
எளிமையான கதை.
நல்லதொரு பகிர்வு.

Kanchana Radhakrishnan said...


//திண்டுக்கல் தனபாலன் said...
அருமை...//

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

//Pandian Subramaniam said...
பலனற்ற வாழ்க்கை பயனற்றது.
சிறந்த கருத்து.
எளிமையான கதை.
நல்லதொரு பகிர்வு.//
நன்றி Pandian Subramaniam.