Tuesday, May 23, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 7- காணாமல் போன ஆடு

(இது தனது போதனைகளின் போது இயேசு கூறிய உவமையாகும்.இயேசு பாவிகளுடன் சேர்ந்து, அவர்களுக்கு போதிக்கிறார் என பரிசேயர்கள் கூறிய போது சொன்னது இது)

ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒரு ஆடு காணாமல் போகிறது.அவர் மீதமுள்ள 99 ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டு விட்டு, காணாமல் போனதைக் கண்டுபிடிக்கச் செல்வார்.

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்வுடன் தன் தோள்களில் போட்டுக் கொள்வார்.வீட்டுக்கு வந்து நண்பர்களையும், அண்டை வீட்டாரையும் அழைத்து, "காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்ததாகக் கூறி மகிழ்வார்.

இங்கு, காணாமல் போனதாகச் சொன்ன ஆடு, பாவ வழியில் சென்று, கடவுளை விட்டு தூரமாக உள்ள மனிதரை குறிக்கிறது.அவன், மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும்.மனம் மாறா 99 நேர்மையானவர்களையும் குறித்த மகிழ்ச்சியை விட, மனம் மாறிய பாவியைக் கண்டே மகிழ்ச்சி உண்டாகும்.

1 comment:

Pandian Subramaniam said...

காணாமல் போன பிரியமானப் பொருளை மீண்டும் கண்டெடுப்பது மிக்க மகிழ்ச்சியே.
அழகிய உவமை. நல்ல பகிர்வு.