Wednesday, May 10, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் - 2- இரண்டு கடன்காரர்கள்

(இக்கதை மனம் திருந்துதல் பற்றிக் கூறப்பட்ட உவமையாகும்)

சீமோன் என்னும் பரிசேயர் வீட்டில் உண்பதற்காக இயேசு சென்றிருந்த போது கூறிய கதையாகும்

இயேசுவை சீமோன் என்னும் பரிசேயர், தம்மோடு உணவு உண்ண அழைத்திருந்தார்.

இயேசுவும், சென்று பந்தியில் அமர்ந்தார்.

அந்நகரில் மிகவும் பாவியான் பெண் ஒருத்தி இருந்தாள்.

இயேசு, பரிசேயர் வீட்டில் உணவு உண்ணப் போகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அப்பெண், நறுமணத்தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.இயேசுவிற்குப் பின்னால் கால் மாட்டில் வந்து அழுது கொண்டே நின்றார்.அவரது காலடிகளை தன் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து..தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத்தைலம் பூசினார்

சீமோன் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் எனில், தம்மைத் தொடும் இப்பெண் யார், எத்தகையவள் என அறிந்திருக்க வேண்டுமே.இவள் பாவியாயிற்றே1" என எண்ணினார்

அவர் தனக்குள் சொல்லிக் கொள்வதை அறிந்த இயேசு, சீமோனிடம்  ,கேள்வியாக  ஒரு உவமையைக்  கூறினார்

"கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்தூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமும் கடன் பட்டிருந்தனர்.கடனைத் தீர்க்க அவர்களால் இயலாமற் போனதால், இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்தார்.இவர்களில் யார் அவரிடம் அதிக அன்பு காட்டுவார்?"

சிமோன் அதற்கு  பதிலாக , "அதிகக் கடன் பெற்றவர் எவரோ அவரே" என்றார்.

இயேசு அவரிடம் " நீர் சொன்னது சரியே" என்றவர், அப்பெண்னை நோக்கித் திரும்பி, :இவரைப் பார்த்தீரா! நான் வீட்டிற்குள் வந்த போது நீர் என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை.இவரோ தன் கண்ணீரால் என் கால்களைக் கழுவினார்.தன் கூந்தலால் துடைத்தார்.என் காலடிகளுக்கு ஓயாமல் முத்தமிட்டார்..நறுமணத் தைலம் பூசினார்,இவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன.ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார்.குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்

இவ்வுமமையின் பொருள்- கடவுளை அதிகமாக அன்பு செய்தால் அவர் கூடுதலான பாவங்களை மன்னிக்கிறார்

(பரி சேயர் என்றால் பிரித்தெடுக்கப்பட்டக் கூட்டம் எனப் பொருள்.வேதப்பிரமாணத்திற்கு ஜெப ஆலயங்களில் விளக்கம் கொடுக்கும் கிறித்துவர்கள் இவர்கள்.மிகவும் செல்வாக்கு மிக்கவராய்த் திகழ்ந்தார்கள்)

No comments: