Saturday, May 27, 2017

இயேசு கூறிய உவமைகள் 8- காணாமல் போன காசு

(இது இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக்கதையாகும்)

இயேசுவை பரிசேயர்., பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் எனக் குற்றம் சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று   உவமைகளில் இரண்டாவதாகும்

நீதிமான்களுக்கின்றி பாவிகளுக்கே  இயேசு அதிகம் தேவை என்பதை வலியுறுத்தும் முகமாகக் கூறப்பட்டது

காணாமல் போன ஆடு, ஊதாரி மைந்தன் ஆகிய உவமைகள் ஒரே பொருளைக் கொண்டிருக்கின்றன

ஒரு பெண்ணிடம் இருந்த பத்து வெள்ளிக் காசுகளில் ஒன்று காணாமல் போய் விட்டாலும், எண்ணெய் விளக்கேற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டு பிடிக்கும் வரை கவனமாகத் தேடி, அது கிடைத்ததும், காணாமல் போன காசைக் கண்டு பிடித்து விட்டேன் என மற்றவருடன் அந்த மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்கிறாள்

காணாமல் போன காசு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது.அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும்

2 comments:

Pandian Subramaniam said...

கல்வியறிவு அற்ற ஆடு மேய்ப்பர்கள், குழந்தைகளே வாழ்வாகக் கருதும் நகரத்து மக்கள், பெண்கள் (வெள்ளிக் காசு யூதப் பெண்களுக்கு தாலிக்கு இணையானது) என அவரவர்க்கு எளிதில் புரியும்படி கடவுளின் அன்பை விவரித்துச் சொல்லப்பட்ட அழகிய உவமானங்களின் நல்ல தொகுப்பு.வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.