Wednesday, May 17, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 5- ஊதாரி மைந்தன்

(இயேசு போதித்துக்கொண்டிருந்த போது, ஒருநாள், அன்றைய சமூகத்தில் பாவம் செய்பவர்களாகக் கருதப்பட்ட ஆயக்காரர் (வரி வசூலிப்பவர்), பாவிகள் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்களாகக் கருதப்பட்டனர்) அவரது போதனையை கேட்கும்படி அவரிடம் வந்து சேர்ந்தனர்.அப்பொழுது, தங்களை பாவம் அறியாதவர்களாக எண்ணிக் கொண்ட பரிசேயரும்,வேதபாரகரும் (யூத கோயில் மத குருகள்) தமக்குள், இயேசு பாவம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் உணவருந்துகிறார் என்றனர்.அப்போது இயேசு கூறிய உவமை இதுவாகும்)

ஒரு மனிதனுக்கு இரண்டு மகன் கள் இருந்தனர்.அவர்களில் இளையவன் தன் தகப்பனிடம், சொத்தில் தன் பங்கைத் தரும்படி கூறினான்.தகப்பனும், தன் மகன் களுக்கு சொத்தைப் பிரித்தார்.

இளைய மகன் எல்லாவற்றையும்  விற்று சேர்த்துக் கொண்டு..வெளிதேசத்திற்குச் சென்று..அங்கேயே தீய வழிகளில் வாழ்ந்து சொத்துகளை அழித்தான்.எல்லாவற்றையும்  அழித்தப் பின்னர், அந்நாட்டில் திடீரென கொடிய பஞ்சம் ஏற்பட்டது.அவன், வயல்களில் பன்றிகள் மேய்க்கும் குடியானவனிடம் வேலைக்கு சேர்ந்தான்.பன்றிகள் தின்னும் தவிட்டயாவது தின்னலாம் என எண்ணினான்.ஆனால், அதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை

நாளடைவில், அவனுக்கு புத்தி தெளிந்தது."என் தகப்பனிடம் எத்தனையோ வேலையாளர்ககலுக்கான சாப்பாடு இருக்கின்றது.நானோ பசியால் சாகிறேன்..நான் என் தகப்பனிடம் சென்று...தகப்பனே! இறைவனுக்கு எதிராகவும், உனக்கு முன்னதாகவும் பாவஞ் செய்தேன்.உன் குமாரன் எனச் சொல்ல தகுதியற்றவன்.என்னை உங்களது வேலையாளிகளில் ஒருவனாக வைத்துக் கொள்ளுங்கள்" என எண்ணி தன் தகப்பனிடம் வந்தான்

அவனைக் கண்டதும், தகப்பன் கட்டித்தழுவி முத்தமிட்டான்.மகனானவன் தகப்பனுக்கு தந்தையே .இறைவனுக்கு எதிராகவும், உமக்கு  முன்பும் பாவஞ்செய்தேன்."என்றான்

தந்தை தன் வேலையாட்களிடம், உயர்ந்த ஆடைகளைக் கொணரச் செய்து அவனுக்கு அணிவித்தான்.கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு காலணிகளையும் அளித்தான்.இறந்த தன் குமரன் மீண்டும் உயிர் பெற்றுள்ளான் என மகிழ்ந்து விருந்தளித்தான்

வயல் வேலைகளிலிருந்து திரும்பிய மூத்த மகன் நடந்த விஷயங்களை அறிந்து, கோபமுற்று, வீட்டினுள் செல்லாமல் வெளியே இருந்தான்

தகப்பன் வெளியே வந்து அவனை வருந்தியழைத்தார்

அவனோ, " நான் உங்கள் கட்டளையை மீறாமல் இவ்வளவு நாட்கள் உழைத்தேன்.ஆனால் என்னை நீங்கள் போற்றவில்லை.உமது இந்த மகன் எல்லா கெட்ட வழிகளிலும் ஈடுபட்டு சொத்துகளை அழித்துவிட்டு வந்த பின் அவனுக்கு விருந்து அளித்து கௌரவிக்கிறீர்கள்" என்றான்

அதற்குத்  தகப்பன், ",மகனே! நீ எப்போதும் என்னுடன் இருக்கின்றாய்.எனக்கானது எல்லாம் உன்னுடையதாகி விட்டது.
உன் சகோதரனான இவனோ இறந்தான்.மீண்டும் உயிர்ப்பித்தான்.காணாமல் போனவன் மீண்டும் காணப்பட்டான்.ஆகவே நாம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டாமா?" என்றார்

( ஆயிரம் நல்லவர்கள் , நல்வழியில் வாழ்ந்தாலும், மனம் திருந்திய கெட்டவனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார்.
எவ்வளவு பாவம் செய்து தவறிப்போனாலும், பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்பும் போது இறைவன் அவனை மன்னித்து ஏற்பார்)

4 comments:

Pandian Subramaniam said...

கதை வழியாகக் கடவுளின் அளவற்ற அன்பு, மனம் திரும்புதலின் அவசியம் குறித்துச் சிறந்த விளக்கம்.
நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

Thanks.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks வெங்கட் நாகராஜ்.