Thursday, May 11, 2017

இயேசு கூறிய உவமானக்கதைகள் 3- இரண்டு மகன்கள்

(இது தனது போதனையின் போது கூறிய கதையாகும்)

இயேசு ஆலயத்திற்குள் போதித்துக் கொண்டிருந்த போது, தலைமைக் குருக்களும், மக்களின் முப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?" என்று வினவ இயேசு இவ்வுவமையைக் கூறினார்

ஒரு மனிதருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர்.

மூத்த மகனிடம் சென்ற தந்தை, "மகனே! நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார்

அதற்கு மூத்த மகன் "நான் போக விரும்பவில்லை" என்றான்.பின்னர், தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு போய் வேலை செய்தான்.

தந்தை அடுத்த மகனிடம் சென்றும் இதையேச் சொன்னார்

அவன் "நான் போகிறேன்:" என்றான்.ஆனால் போகவில்லை

முதலில் போக மறுத்து, பின் மனம் மாறிச் சென்றவன் பாவிகளாக இருந்து மனம் மாறியவரைக் குறிக்கிறது.இவர்கள், முதலில் கடவுளின் சொல் கேளாமல் நடந்தனர்.பின் மனம் மாறி கடவுள் சொற்படி நடந்தனர்

முதலில் போகிறேன் என்று சொல்லி பின் போகாமல் இருந்த இரண்டாமவன், கடவுள் சொன்னதை செய்வதாகக் கூறி வெளி வேடமிட்டவன் ஆகிறான்.இப்படிப்பட்டவன், விண்ணரசில் இடம் பிடிக்க மாட்டார்கள் என்பது இவ்வுவமையின் பொருளாகும்

4 comments:

Pandian Subramaniam said...

வெளிவேஷம் அல்ல, உண்மையான வாழ்க்கையே முக்கியம். அழகிய உவமானம்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நன்றி.

Kanchana Radhakrishnan said...

நன்றி. வெங்கட் நாகராஜ்