Monday, May 29, 2023

42. நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு

 42 - நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு


திண்டுக்கல் பக்கத்தில் ஒரு கிராமத்தில் விவசாய தோட்டங்கள் இருந்தன..அதில் வேலாயுதம் என்ற விவசாயி க்கு சொந்தமான  இரண்டு தோட்டங்கள் உள்ளன.வேலாயுதம் தினமும் வந்து தோட்ட்த்திற்கு தண்ணீர்  விட்டு குப்பைகளையெல்லாம் அகற்றிவிட்டு செல்வ்து வழக்கம்.

அந்த தோட்டத்திற்கு ஒரு மானும்,ஒரு காகமும் வேலாயுதம் இல்லாத பொழுது வந்து மான் புற்களையும்,காகம் பழங்கள்,கொட்டைகள் முதலியவைகளை உண்டுவிட்டு செல்வது வழக்கம்.

மானும், காகமும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.இரவில் அவர்கள் ஒரு மரத்தடியில்  மானும் ,மரத்தின் கிளையில் காகமும் வசிப்பது  வழக்கம்.

அந்த தோட்டத்தில் ஒரு நரி அவ்வப்போது வருவது வழக்கம்.மானும் காகமும் சிறந்த நண்பர்களாக இருப்பது நரிக்கு பிடிக்கவில்லை.எப்படியாவது அவர்களை பிரிக்கவேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் மானிடம் நரி ,"நண்பா அடுத்த தோட்டத்தில் நிறைய பச்சைபசேலென்று புல்வெளிகள் நிறைய உள்ளன.நீ என்னுடன் வந்தால் அதை நீ உண்டு மகிழலாம் "என ஆசைக்காட்டியது.

மானும்  வருவதாக கூறியது.மரத்தின் மேலிருந்த காகம் அதைக்கேட்டு மானிடம் நண்பா’ முன் பின் தெரியாதவர்களிடம் நாம் நட்புடன் பழகக்கூடாது.நீ நரியுடன் செல்ல வேண்டாம்" என்றது.

மான் கேட்கவில்லை.அடுத்த நாள் மான் நரியுடன் சென்றது.

மானுக்கு அந்த புல்வெளியை பார்த்ததும் மிகவும்மகிழ்ச்சி.துள்ளி துள்ளி  குதித்து ஓடியது.வேண்டிய அளவு புற்களை  சாப்பிட்டது.இதை தூரத்திலிருந்து பார்த்த வேலாயுதம்." இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்,நாளைக்கு மான் வரட்டும் பிடித்து விடுகிறேன் "என்று மனதில் சொல்லிக்கொண்டு இரவு ஒரு வலையை மான் வரும் டத்தில்  போட்டான்.

அடுத்த நாள் மான் வந்தபோது வலைக்குள் சிக்கிக்கொண்டது. நரியிடம், "என்னை காப்பாத்து" என்று கூற நரியோ 'நான் இன்று விரதம் எதையும் கடிக்கமாட்டேன்" என்று கூறி தப்பியது.

நரியிம் எண்ணம் மானை இரவு அடித்து சாப்பிடலாம் என்பதே.

அப்பொழுது காகம் நண்பனை தேடிக்கொண்டுவர, மான் வலையில் மாட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து "நான் சொல்வதை நீ கேட்கவில்லை,இப்பொழுது மாட்டிக்கொண்டாய்.சரி இப்பொழுது நான் சொல்வதைக்கேள் ..அந்த விவசாயி தூரத்தில்  வந்துகொண்டிருக்கிறான்.நீ இறந்தது போல் நடி.நான் உன்னை மெதுவாக கொத்திக்கொண்டிருக்கிறேன்.விவசாயி நீ இறந்து விட்டாய் என்று நினைத்து வலையை எடுத்துக்கொண்டு போய்விடுவான்.நாமும் தப்பிக்கலாம்" என்றது.

 அது போல் மானும் இறந்தது போல் மூச்சை அடக்க வேலாயுதம் மான் இறந்து விட்டது என்று நினைத்து வலையை எடுத்து விட்டான்.இரண்டும் தப்பி ஓடின.

இதை பார்த்த அவன் தன் கையில் இருந்த கம்பால் மானை நோக்கி வீசினான்.கம்பு தவறி புதருக்குள் இருந்த நரியின் தலையின் மேல் பட்டு அது இறந்தது.

நட்பை தேர்ந்தெடுக்கும் முன்பு ஆராய்ந்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காகம் கூறியபடியே மானுடன் சென்றது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.