Monday, May 1, 2023

41. பிறன் பொருள் விரும்பாதே


41- பிறன் பொருள் விரும்பாதே



 வயலூர் என்ற ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ராஜனும்,சிங்காரமும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.ராஜனுடைய அப்பா பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். ராஜனும் நன்றாகப் படிப்பான்.நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவன்.எல்லோரிடமும் மரியாதையாக இருப்பான்.

அவனுக்கு நேர்மாறாக சிங்காரம் இருப்பான்.படிப்பில் ஆர்வம் கிடையாது.பள்ளிக்கும் சரியாக வருவதில்லை.

இருவரும் அடுத்தடுத்த வீட்டில் இருப்பதால் நன்றாகபேசிக்கொள்வார்கள்.சேர்ந்து விளையாடுவார்கள்.சிங்காரத்திற்கு ராஜன் தன்னை விட இரண்டு வயது சிறியவன் என்பதால் அவனிடம் மட்டும் அன்பாக நடந்து கொள்வான்.

ஒரு நாள் ராஜனுக்கு அவனுடைய அப்பா புஸ்தகம் வாங்குவதற்கு ஐம்பது ரூபாய் கொடுத்தார்.அதை எடுத்துக்கொண்டு வந்தவன் வழியில் சிங்காரத்தை பார்த்து "சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டபின் கடைக்கு போய் ஒரு புஸ்தகம் வாங்கவேண்டும்,நீயும் கூட வருகிறயா என்று கேட்டான்.

"வருகிறேன்" என்றான் சிங்காரம்.

ராஜன் பையில் ஐம்பது  ரூபாயை பார்த்த சிங்காரம் இடைவேளையின் போது அவனுடைய பையிலிருந்து அதை எடுத்து விட்டான். சாயங்கால்ம் இதை வைத்துக்கொண்டு சினிமாவுக்கு செல்லலாம் என்பது அவனது எண்ணம்.

இடைவேளை முடிந்து ராஜன் பையைப் பார்க்க அதில் ஐம்பதுரூபாய் இல்லை.

அவன் உடனே ஆசிரியரிடம் முறையிட்டான்.

ஆசிரியர் உடனே  “மாணவர்களே எல்லோரும் நான் உட்பட கண்ணை இரண்டு நிமிடம் மூடியிருப்போம்.திருடியவன் யாராக இருந்தாலும் மெதுவாக வந்து ராஜன் பையில் பணத்தை வைத்து விடுங்கள். இதனால் யார் எடுத்தார் என்று யாருக்கும் தெரியாது,எடுத்தவனும் திருந்தி விடலாம்"என்றார்.

அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர்

இரண்டு நிமிடம் கழித்து எல்லோரும் கண் திறந்துபார்த்தபோது, ராஜன் பையில் பணம் இருந்தது.

"யார் வைத்தார்கள்" என்று தெரியவில்லை.

மாலை பள்ளி விட்டபின் ஆசிரியர் தனியாக அமர்ந்திருக்க சிங்காரம் வந்தான்."சார், நான் தான் பணத்தை எடுத்தேன்ஆனால் பணத்தை திருப்பி வைக்கவில்லை.மனசு உறுத்தலாக இருக்க உங்களிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டு பணத்தை கொடுத்து  விட  வந்தேன் "என்றான்.

அதைக்கேட்டு ஆசிரியர் எ"னக்கு தெரியும் இப்படி நடக்குமென்று.நான் தான் அந்த ஐம்பது ரூபாயை வைத்தேன்.எடுத்தவன் எப்படியும் திருந்தி என்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் இதை செய்தேன் "என்றார்.

"மேலும் நீயும் திருந்திவிட்டாய் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி.இனிமேல் நீயும்  பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ராஜனைப்போல நன்றாகப்படித்து சிறந்த மாணவனாக வ்ரவேண்டும்" என்றார். 

சிங்காரமும் தவறை உண்ர்ந்து அன்று முதல் நன்றாக படித்து நல்ல மாணவனான்.