Friday, April 8, 2016

155. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



4.' ஆண்டவன் மீது நம்பிக்கை "

ஆற்றுக்கு மறுகரையில் வசித்து வந்த சன்னியாசி ஒருவருக்கு தினந்தோறும் படகில் பால் கொண்டு வந்து தருவாள் ஒரு பெண்,

ஒரு சமயம் படகு வர தாமதமானதால் குறித்த நேரத்தில் பால் கொண்டு வந்து தர முடியவில்லை.

இதனால் கோபமடைந்த சன்னியாசி,தாமதத்திற்கான காரணத்தைக் கேட்க.அந்தப் பெண்ணும் படகு கிடைக்காததைக் கூறினாள்.

உடன் சன்னியாசி ' ஆண்டவன் பெயரைச் சொன்னால் பிறவிப் பெருங்கடலையே கடக்கலாம், உன்னால் இந்த ஆற்றைக்கூட கடக்க முடியவில்லையே' என்றார்.

சன்னியாசி சொன்னதைக்கேட்ட அந்தப் பெண்..... தினமும் ஆண்டவன் பெயரை உச்சரித்தபடியே ஆற்றினைக் கடந்து வந்து பால் எடுத்து சென்று கொண்டிருந்தாள்.

தினசரி சரியான நேரத்துக்கு அவள் வருவதைக் கண்ட சன்னியாசி ' நீ எப்படி ஆற்றைக் கடக்கிறாய் ' என்றார்,

பகவான் நாமத்தை உச்சரித்தப்படியே ஆற்றில் நடந்து வருவேன்  என்றாள்.

"அப்படியா" என ஆச்சரியத்துடன் கேட்டவர் அதை தனக்கு காண்பிக்குமாறு கூறினார்.

' பால்காரப்பெண் ஆண்டவன் பெயரை கூறியபடியே ஆற்றில் நடக்க ஆரம்பித்தாள்'.

வியந்த குருவால் ..அவளைப்போல ஆற்றில் நடக்க முடியவில்லை.தனது ஆடை நனைந்துவிடுமே என்ற பயம்.

ஆண்டவனை நம்புகிறவர் .... துணி நனையுமே என ஏன் பயப்படுகிறீர்கள் என்றாள் பெண்.

அப்பொழுதுதான் சன்னியாசிக்கு ஆண்டவன் மீது தான் முழு நம்பிக்கை வைக்கவில்லை எனத் தெரிந்தது.

ஆண்டவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை ஆச்சிரியங்களை செய்ய வைக்கும் என உணர்ந்தார்.

நாமும் கடவுளை வேண்டிக்கொண்டால் மட்டும் போதாது கடவுளிடம் முழு நம்பிக்கையை வைக்கவேண்டும்.

No comments: