Wednesday, November 12, 2014

136- காட்டெருமையின் முன்னேற்பாடு (நீதிக்கதை)

                 

ஒரு காட்டில், காட்டு எருமை ஒன்று தன் கொம்புகளை மரத்தில் உரசியபடியே தீட்டிக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட நரி , "எதற்கு தேவையில்லாமல் இப்போது கொம்புகளை கூராக்க தீட்டிக் கொண்டிருக்கிறாய்" என்றது.

"திடீரென சிங்கமோ, புலியோ என்னைத் தாக்க வந்தால், அதனிடமிருந்து தப்பிக்கலாம் அல்லவா? ஆகவேதான் கூர் தீட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றது எருமை.

"வேலையற்ற வேலை செய்கிறாய்.அதற்கு நொண்டிச் சாக்கு ஒன்றும் சொல்கிறாய்" என நரி கிண்டல் செய்தது.

அந்த சமயம், சிங்கம் ஒன்று பெரும் கர்ஜனை செய்தபடியே காட்டெருமையின் மீது பாய்ந்தது.நரி சிங்கத்தைக் கண்டதும் ஓடி ஒளிந்தது.

தன் மீது பாய்ந்த சிங்கத்தை காட்டெருமை கூரிய தனது கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது.காயமுற்ற சிங்கம் ஓடிவிட்டது.

திரும்பி வந்த நரி எருமையைப் பார்த்து, "ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ள நீ செய்த முன்னேற்பாடு போற்றுதலுக்குரியது" என பாராட்டியது.

நாமும் எந்த ஒரு வேலையையும், பிறகு செய்து கொள்ளலாம் என தள்ளிப் போட்டால், அதனால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆகவே, எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடக்கூடாது. 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

எளிமையாக அருமையான நீதி
சொல்லிப் போகும் கதை மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Ramani Sir