Tuesday, November 11, 2014

135. ' நரியின் சாதூர்யம்' (நீதிக்கதை)




ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது.
அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன.அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன.
மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.

கோடைகாலம் வந்ததது...நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது.தண்ணீர் குறைந்ததால்,முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவ்தில்லை.
உண்ண எதுவும் இல்லா நிலையில்,ஒரு நாள்,முதலை நண்டிடம்,நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய ......நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து "முதலை செத்தது போலத்தெரியவில்லையே ! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே " என்றது.

இதக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது.அதைப் பார்த்த நரி,நண்டிடம் 'செத்த முதலை எப்படி வாலை ஆட்டும்.நீங்கள் இருவரும் போய் சொல்கிறீர்கள்' என கூறிவிட்டு ஓடியது.

அறிவில்லாத முதலையும் நண்டும் ஏமாந்தது.

நாமும் யாரேனும் ஏதேனும் கூறினால் அதை உடனே நம்பாது நம் அறிவை பயன்படுத்தி உண்மையை கண்டறியவேண்டும்.

No comments: