கழுதை ஒன்று தனது சலவைத்தொழிலாளியான முதலாளியிடமிருந்து தப்பி காட்டுக்குள் புகுந்தது.
காட்டில் புலி,சிங்கம்,யானை போன்ற மிருகங்களைப் பார்த்து பயந்து ....அவற்றிடம் இருந்து எப்படி தப்புவது என புரியாது விழித்தது.
அப்போது சிங்கத்தின் தோல் ஒன்று கழுதைக்குக் கிடைத்தது.அதை எடுத்து போர்த்திக்கொண்டு காட்டிற்குள்.. தானும் ஒரு சிங்கம் போல உலாவியது.
அது தெரியாத மிருகங்கள் கழுதையை சிங்கம் என நினைத்து பயந்து ஓடின.
அதைக் கண்டு மகிழ்ந்த கழுதை ....மீண்டும் நகரத்திற்குள் நுழைந்தது.மனிதர்கள் சிங்கம் நகரத்திற்குள் இருப்பதைப் பார்த்து பயந்தனர்.
கழுதைக்கு மகிழ்ச்சி அதிகமாகியது...திடீரென கத்த ஆரம்பித்தது.காணாமல் போயிருந்த தன் கழுதையைத் தேடிக் கொண்டிருந்த சலவைத்தொழிலாளி ...தன் கழுதையின் குரல் கேட்டு வந்தான்.
தன் கழுதை சிங்கத்தின் தோலை போர்த்தியிருப்பதைக் கண்டு அதை நீக்கிவிட்டு கழுதையை பலமாக அடிக்க ஆரம்பித்தான்.
நாமும் நம்மைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
பிறர் போல நடிக்க ஆசைப்பட்டால் ஒருநாள் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்.
2 comments:
அருமையான படிப்பினை...
Thanks
திண்டுக்கல் தனபாலன்
Post a Comment