Wednesday, October 22, 2014

132. நல்ல நண்பன் வேண்டும் (நீதிக்கதை)



ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன.அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன்.

அன்று மாலை,அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ' ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள்.நான் பறவை அல்ல ...அதனால் என்னை விடுவிக்கவேண்டும்' என்று கேட்டது.

அதற்கு விவசாயி ..." நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய்.கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால்..அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும்....கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும்.இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

" நல்ல நண்பனையே தேர்ந்தெடுங்கள்"

4 comments:

கோமதி அரசு said...

நல்ல நீதி கதை.

Kanchana Radhakrishnan said...

Thanks கோமதி அரசு

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. சொல்லும் நீதியும் நன்று.

Kanchana Radhakrishnan said...


நன்றி. வெங்கட் நாகராஜ்.