Monday, October 27, 2014

133.ஆபத்தில் உதவ வேண்டும் (நீதிக்கதை)



சரவணனும் முருகனும் நண்பர்கள்.இருவரும் ஒரு நாள் அடுத்த ஊருக்கு பிரயாணம் செய்தனர்.

போகும் வழியில் அவர்கள் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது.காட்டில் கொஞ்சதூரம் போனதும் ஒரு பெரிய கரடி அவர்களுக்கு முன்னால் வருவதைக்கண்டனர்.

கரடியைக் கண்டதும் சரவணன் உடனே ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான்.முருகனுக்கு மரத்தில் ஏறத்தெரியாது.மரத்தின் மீது ஏறிய சரவணனின் உதவியும் கிடைக்கவில்லை.

தன்னாலும் தனித்து கரடியை எதிர்க்கமுடியாது.என்ன செய்வது என யோசித்தவன்,உடனே மூச்சை அடக்கிகொண்டு இறந்தவன் போலக்கிடந்தான்.

கரடி அவனிடம் வந்து பார்த்து ...இறந்த உடல் நினைத்து அப்பால் போய்விட்டது.

கரடி போனதும்,மரத்திலிருந்து இறங்கிய சரவணன் முருகனிடம் 'கரடி உன்னிடம் என்ன சொல்லிற்று ' என்று கேட்டான்
முருகன் சொன்னான்,கரடி என்னிடம் வந்து ' ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதே ' என்றது என்றான்.

நாமும் சரவணனைப் போல இல்லாமல் ,,,அடுத்தவர்க்கு ஆபத்து.ஏற்பாட்டால் அவர்களைவிட்டு விலகாமல் நம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும்.

No comments: