Thursday, November 1, 2012

112 - கடவுளும் காற்றும் (நீதிக்கதை)





ஒரு நாள் மழையும் புயலுமாக இருந்தது. பலத்தக் காற்று வீசி பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மக்களும் அவதிக்குள்ளாயினர்.
அப்போது பலர் ' காற்று இப்படி வீசுகிறதே' என காற்றை சாடினர்.

இதனால் காற்று மனம் வருந்தி, கடவுளிடம் சென்று, ' இறைவா...நான் மனிதர்க்கு நன்மையே செய்கிறேன்.அவர்கள் உயிர் வாழும் மூச்சாகவும் உள்ளேன்.ஆனால் இதையெல்லாம் மறந்து மக்கள் என்னை ஏசுகின்றனரே ". என்றது.

அதற்கு கடவுள்... ' எப்போதும் மனிதர்க்கு உதவும் வரை புகழுண்டு.ஆனால் அவர்களுக்கு தீங்கிழைக்கும் போது திட்டு தான் கிடைக்கும்.உன்னை கோபமாகத்தான் பேசுவார்கள்' என்றார்.

அவர் மேலும் சொன்னார் ' நீயே புல்லாங்குழலில் நுழைந்து இசையாய் வெளியேறினால் மக்கள் மகிழ்கின்றனர். உதைப்பந்தில் அடைபட்டுக் கிடக்கும்போது அவர்களாலேயே உதைபடுகிறாய்.இதிலிருந்து என்ன தெரிகிறது...நீ மனிதனுக்கு பயன்படாமல் அடைத்துக் கிடந்தால் உதைபடுகிறாய்.அது போல் தான்...உன்னால் தீமை நிகழும்போது மனிதர்களின் ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளாகிறாய்' என்றார்.

அது முதல் காற்று தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவையே செய்வேன் என்று குளிர்ந்து வீச ஆரம்பித்தது.

நமக்கும் யாரேனும் தீங்கிழைத்தாலும், ஏசினாலும்,அவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கருத்துக்கள்... உண்மை கருத்துக்கள்...

நன்றி...
tm2

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான கருத்துடன் கூடிய
அழகான கதை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கருத்து.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான கதை.

Kanchana Radhakrishnan said...


// Ramani said...
அருமையான கருத்துடன் கூடிய
அழகான கதை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani.

Kanchana Radhakrishnan said...

//வெங்கட் நாகராஜ் said...
சிறப்பான கருத்து.

நல்ல பகிர்வுக்கு நன்றி.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
வெங்கட் நாகராஜ்.

ADHI VENKAT said...

நல்லதொரு கருத்துகள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி

Kanchana Radhakrishnan said...


// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமையான கதை.//

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.