Tuesday, November 15, 2011

94. 'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான்.

தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான்.

அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார்.

அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர்.

;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன்.இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருப்பதால்...நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கு போவேன்...?' அதுதான் என் கவலை என்றான்.

கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும் புத்தியை உபயோகிக்க தெரியாதவர்களுக்கு ...ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...

7 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான்...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
முனைவர்.இரா.குணசீலன்.

சாகம்பரி said...

குழந்தைகள் பற்றிய சிறப்புத் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் குழந்தைகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிய தொடர் பதிவிற்குஅழைத்துள்ளேன. நேரமிருக்கும்போது தொடருங்கள். மிக்க நன்றி.
http://mahizhampoosaram.blogspot.com/2011/11/blog-post_16.html

வெங்கட் நாகராஜ் said...

உண்மை......

வெங்கட் நாகராஜ் said...

உண்மை......

Kanchana Radhakrishnan said...

// சாகம்பரி said...
குழந்தைகள் பற்றிய சிறப்புத் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் குழந்தைகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிய தொடர் பதிவிற்குஅழைத்துள்ளேன. நேரமிருக்கும்போது தொடருங்கள். மிக்க நன்றி.

தொடர் [பதிவுக்கு அழைத்ததிற்கு நன்றி சாகம்பரி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.