Friday, July 16, 2010

33.கரடியும் இரு நண்பர்களும்


இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து காட்டுப் பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது....

அவர்கள் போகும் வழியில் ...எதிரே திடீரென ஒரு கரடி வர..மரம் ஏறத்தெரிந்த நண்பன் மற்றவனை விட்டு விட்டு சட்டென்று பக்கத்தில் இருந்த மரத்தில் தாவி ஏறிவிட்டான்.

என்ன செய்வது என பயந்த மற்றவன் அப்படியே கீழே படுத்து ..மூச்சை அடக்கி செத்த பிணம் போலக் கிடந்தான்.

உயிரற்ற உடலைக் கரடி பார்க்காது என்பதற்கிணங்க ...அக்கரடி அவனிடம் வந்து மோப்பம் பிடித்து விட்டு அகன்றது.

கரடி சென்றதும் மரத்திலிருந்த நண்பன் இறங்கி..'கரடி உன்னை நெருங்கி உன் காதில் என்ன சொல்லிற்று' என்றான்.

அதற்கு மற்றவன்..'ஆபத்து காலத்தில் உன்னை உதறி விட்டு தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மரம் ஏறிய சுயநலமிக்க நண்பர்களை நம்பாதே என்று சொல்லிற்று' என்றவாறே..அவனை விட்டு
பிரிந்து தனியே நடக்கலானான்.

ஒருவருக்கு ஆபத்து வரும் நேரத்தில் உதவுவது நண்பர்களின் செயலாக இருக்கவேண்டும்.

2 comments:

priya.r said...

நல்ல பகிர்வு மேடம் .நான் அதிகமாக இந்த கதையை தான் என் குழந்தைகளுக்கு சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன் !
கெட்ட நண்பர்களின் சகவாசம் கேடு விளைவிக்கும் என்ற நீதிகதையை நினைவு படுத்தியதற்கு நன்றிகள் .

மகாபாரதம் ப்ளாக் மூலமாக தான் உங்களின் ப்ளாக் தெரிந்து கொள்ள முடித்தது.

உங்கள் இருவருக்கும் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .

ரொம்ப நன்றிங்க காஞ்சனா மேடம்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பிரியா.