Monday, February 20, 2023

11. நேர்மை (நீதிக்கதை)

11- நேர்மை

 

 வயலூர் என்ற ஊரில் ராமன்,லட்சுமணன் என்ற இரு நண்பர்கள் இருந்தனர்.ஓரளவு படித்திருந்தாலும் இருவருக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை.ஊரில் சிறு சிறு வேலைகளை செய்து பிழைத்து வந்தனர்.

சிலநாட்களுக்கு பிறகு இருவரும் ஏதோ ஒரு வேலையின் பொருட்டு பக்கத்து நகருக்கு சென்றனர்.வழியில் ஒரு பை கிடைத்தது.அதில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது.ராமன்’ இருவரும் பாதிப்பாதி எடுத்துக்கொள்ளலாம்’ நம்முடைய  வறுமையும் குறையும் "என்றான்.

லட்சுமணனோ, "வேண்டாம் இது இன்னொருவரது பணம்.நமக்கு வேண்டாம்.நாம் இதை நம்மூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துவிடுவோம்.அவர் விசாரித்து உரியவரிடம் ஒப்படைப்பார் 'என்றான்.

ராமனோ, "முடியாது நமக்கு கிடைத்ததை நாம் ஏன் விடவேண்டும்.இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்" என்று லட்சுமணன் கையில் ரூபாய் 25000/- த்தை திணித்துவிட்டு மீதியை அவன்  வீட்டுக்கு எடுத்து சென்று அந்த  பணத்தில் மனைவி, குழந்தைகளுக்கு துணி மணி வாங்கிகொடுத்து தாராளமாக செலவு செய்தான்.

லட்சுமணன் நேராக  அந்த ஊர் தாசில்தாரிடம் சென்று நடந்ததைக்கூறி அவரிடம் தன்னிடமிருந்த 25000/- ரூபாயை கொடுத்து உரியவரிடம் சேர்க்க சொன்னான்.

தாசில்தாரும் விசாரித்து அந்த பணம் ஒரு பழ வியாபாரியின் பணம் என்றும்,அன்றைய கடை வசூலை எடுத்துக் கொண்டு செல்லும் போது தொலைத்து விட்டதாகவும் கூறியதால்,அப்பணத்தை தாசில்தார் அவரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கூறினார். மேலும், லட்சுமணனை உடனடியாக தன்னைப் பார்க்க வரச் சொன்னான். லட்சுமணனும் அங்கு சென்றார்.அங்கே இருந்த பழவியாபாரி அவனுடைய நேர்மையை பாராட்டி அவனுக்கு தனக்கு தெரிந்த கடை ஒன்றில்  கேஷியராக வேலை வாங்கிக்கொடுத்தார்.

மீதி ராமன் எடுத்துச் சென்ற பணத்தை அவனைப் பார்த்து எப்படி வாங்கிக் கொள்ள வேண்டுமோ..அப்படி வாங்கிக் கொள்வதாகக் கூறினார்.

லட்சுமணன்,நடந்ததை ராமனிடம் கூறி ராமா’ ஒன்றை நினைவில் கொள்,நேர்மையாக  நடந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.ஆகவே அவர் வந்தால் அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்றான்.

நாமும் லட்சுமணனைப்போல நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.