Thursday, October 20, 2016

158. வியாபாரிக்கு தண்டனை

ஒரு வியாபாரி நெய்யில் கலப்படம் செய்து விற்று வந்தான்.மக்கள் புகார் அளித்தனர். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்டான்.

நீதிபதி வழங்கிய தண்டனை:

1.அவன் விற்கும் நெய் முழுவதும் அவனே குடிக்கவேண்டும்.
       அல்லது
2.100 கசையடி
       அல்லது
3. 100 பவுன் அபராதம்

இவற்றில் அவன் விருப்பமான தண்டனையை ஏற்கவும் என்றார் நீதிபதி.

முதலில் அவன் நெய் குடிக்கவே விரும்பினான்.ஆனால் நாற்றம் வீசும் நெய்யை அவனால் குடிக்க முடியவில்லை.

சரி என கசையடிக்கு தயார் என்றான். ஆனால் இருபது கசையடிக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை.

அதனால் அபராதம் செலுத்திவிட்டு போவதாக கூறினான் நீதிபதியும் ஒப்புக்கொள்ள அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்தான்.

முதலிலே அவன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அபராதத்துடன்  வெளியே வந்திருக்கலாம்.

நம்மில் பலரும் அப்படித்தான்.துன்பம் வரும்போது முதலிலே கடவுளை வேண்டி பயன்பெறாது....கடைசியில் இறைவனிடம் சரணடைகிறோம்.

ஆண்டவை என்றும் நம்புவோமாக.

No comments: