Sunday, April 19, 2015

144, கெடுவான் கேடு நினைப்பான் (நீதிக்கதை)


நரி ஒன்று கொழுத்த மான் ஒன்றை பார்த்தது.

' ஆஹா...இதன் உடலில் எவ்வளவு கொழுத்த இறைச்சி இருக்கிறது...இதைத் தின்றால் எவ்வளவு சுவையாக இருக்கும்' என்று எண்ணியது.

; ஆனால் இதை எப்படிக் கொல்வது? தன்னால் அது முடியாதே....இதை சூழ்ச்சியால் தான் அடைய முடியும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு மானிடம் சென்று ' மானே நீ மிகவும் அழகாக இருக்கிறாய்...சிறிது  தூரத்தில் ஒரு புல்வெளி இருக்கின்றது.அங்குள்ள புற்களை தின்றால் நீ மேலும் அழகாவாய். நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.. நீ இந்த இடத்திலேயே இரு என்று சொல்லிவிட்டு சிங்கத்தைத் தேடி சென்றது.

அந்த சிங்கத்திடம் மானைக் காட்டினால்..அது அதை அடித்து தின்றது போக மீதத்தை தான் சாப்பிடலாம் என்று எண்ணி ' சிங்க ராஜாவே ...நான் இப்பொழுது ஒரு மானைப்பார்த்தேன். மிகவும் கொழுத்த மான்.கண்டிப்பாக அதன் இறைச்சி நன்றாக இருக்கும்.உங்களுக்காக ஒரு சிறு சூழ்ச்சி செய்து அதை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு வந்திருக்கிறேன்....நீங்கள் என்னுடன் வந்தால் அதைக்காட்டுகிறேன்' என்றது.

' அப்படியா மிகவும் நன்று' என்று சிங்கம் நரியுடன் செல்லத்தயாரானது.

நரியின் மீது சந்தேகம் கொண்டு ..அதைத் தொடர்ந்து வந்த மான்....நரி சிங்கத்திடம் பேசியதைக்கேட்டு ஓடி ஒளிந்தது.

மானைக் காண வந்த நரி ..அங்கே மான் இல்லாததைக் கண்டது.

' என்னிடம் பொய்யா சொன்னாய்' என்று கோபமுற்ற சிங்கம் ...நரியை அடித்துக்கொன்றது.

நாம் ஒருவருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் நம் செயலே நமக்கு கெடுதலை உண்டாக்கும்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

Kanchana Radhakrishnan said...

Thanks
திண்டுக்கல் தனபாலன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நீதிக்கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks
வெங்கட் நாகராஜ்.

Kanchana Radhakrishnan said...

Thanks
வெங்கட் நாகராஜ்.