Wednesday, January 25, 2012

104. ' மூடர்களை திருத்த முடியாது' (நீதிக்கதை)



ஒரு பணக்காரரிடம் முட்டாள் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவன்..அந்த பணக்காரரைத் தேடி யார் வந்தாலும் பணக்காரரிடம் ' ராமசாமி வந்திருந்தார்...கிருஷ்ணசாமி வந்திருந்தார் ' என்பான்.

இதனால் வருபவர்கள் தங்களுக்கு வேலைக்காரன் மரியாதை தருவதில்லை என்று பணக்காரரிடம் முறையிட்டனர்.

பணக்காரர் உடனே வேலைக்காரனை அழைத்து ...'இனி என்னைத் தேடி வருபவர்களுக்கு நீ மரியாதை தர வேண்டும்..அவர்களை திரு.ராமசாமி..திரு.கிருஷ்ணசாமி என்று சொல்லவேண்டும்' என்றார்.

முட்டாள் வேலைக்காரன் ..அதற்கு பிறகு யார் வந்தாலும்..எது வந்தாலும் அதற்கு முன் ..திரு.. திரு.. என்ற அடை மொழியைச் சேர்த்தான்.

சில நாட்களில்....வேலைக்காரனின் ' திரு' பழக்கம் பணக்காரருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் வேலைக்காரனை கூப்பிட்டு ' இனி..உன் வாயால் ' திரு' என்ற சொல்லைக் கேட்டால் ...உன்னை வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் ' என்றார்.

வேலைக்காரனும் பயந்தபடியே ' சரி' என தலையை ஆட்டினான்.

ஒரு நாள் ..இரவு பணக்காரர் வீட்டிற்கு திருடர்கள் வந்தனர்....பணக்காரரின் அனைத்து பணம்,நகைகளை கொள்ளையடித்து ஓட முற்பட்டனர்.

அதை வேலைக்காரன் பார்த்துவிட்டான்.. வேகமாக பணக்காரர் படுக்கை அறைக் கதவை தட்டினான்.அவரும் கதவைத் திறந்தார்.உடன் வேலையாள் ' டன் வந்து டிண்டு '
போனான் என்றான்.

பணக்காரருக்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.பலமுறை கேட்டும் .....நான் சொன்னால் என்னை வேலையை விட்டு துரத்தி விடுவீர்கள்' என்றான்.

பணக்காரரும் ..' உன்னை துரத்த மாட்டேன்..சொல்' என்றார்.

' திருடன் வந்து திருடிண்டு போனான் ' என்றான்...அப்போதுதான் பணக்காரருக்கு ' திரு ' என்ற வார்த்தையை சொல்லக் கூடாது என்று சொன்னது ஞாபகம் வந்தது.

மூடர்களை திருத்துவது என்பது மிகவும் கடினம் என்று பணக்காரர் உணர்ந்தார். தன் விதியை நொந்து கொண்டார்.

நாமும் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

9 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகவும் ரசித்துப் படித்தேன்
அருமையான நீதிக்கதை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 2

ADAM said...

HA...HA...

Kanchana Radhakrishnan said...

.
வருகைக்கு நன்றி Ramani.

Kanchana Radhakrishnan said...

// ADAM said...
HA...HA...//

:-)))

வெங்கட் நாகராஜ் said...

அதானே... திருன்னு சொல்லக்கூடாதுன்னு அவர் தானே சொன்னார்... :)))

நல்லதோர் நீதிக்கதை... பகிர்வுக்கு நன்றி.

ஹேமா said...

இப்பிடிச் சிரிக்க வச்சிட்டீங்களே !

Kanchana Radhakrishnan said...

//
வெங்கட் நாகராஜ் said...
அதானே... திருன்னு சொல்லக்கூடாதுன்னு அவர் தானே சொன்னார்... :)))

நல்லதோர் நீதிக்கதை... பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
இப்பிடிச் சிரிக்க வச்சிட்டீங்களே !//

வருகைக்கு நன்றி Hema.