Tuesday, January 17, 2012

103. " கண்ணுடையர் கற்றோர் " (நீதிக்கதை)




படிக்காமல்...சோம்பேறியாய் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தான் மாடசாமி...

அவன் ஒரு நாள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது...அவனுக்கு இணையாக...அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரும் வந்து கொண்டிருந்தார்...

அவரைப் பார்த்த மக்கள்...அவருக்கு வணக்கம் சொன்னனர்.

தலையை அசைத்து தலைமை ஆசிரியர் அந்த வணக்கங்களை ஏற்றுக் கொண்டிருந்தார்.அதையெல்லாம் கவனிக்காத மாடசாமி மக்கள் தன்னைத்தான் வணங்குவதாக எண்ணி கர்வம் அடைந்தான்.

இது தினசரி நடந்து கொண்டிருந்து.

ஒரு நாள் தலைமை ஆசிரியர் சற்று நேரம் கழித்து பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது.ஆகவே தாமதமாக புறப்பட எண்ணினார்.

இதை அறியாத மாடசாமி...தெருவில் நடக்க ஆரம்பித்தான்...ஆனால் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.யாரும் வணக்கமும் சொல்லவில்லை.

இதனால் கோபம் அடைந்தவன்...'நீங்கள் எல்லாம் எனக்கு ஏன் வணக்கம் சொல்லவில்லை' என மக்களிடம் கேட்டான்...

அதைக்கேட்டு சிரித்த மக்கள்....;மூடனே ...நாங்கள் ஏன் உனக்கு வணக்கம் சொல்ல வேண்டும்....நீ என்ன படித்தவனா...அல்லது உழைத்து சம்பாதிப்பவனா...நீ படிக்காத சோம்பேறி....தினசரி உன் தேவைகளுக்கே பிறரை எதிர்பார்ப்பவன்' என்றனர்.

அப்போதுதான் மடசாமிக்கு தான் செய்த தவறுகள் புரிய ஆரம்பித்தது.இது நாள் வரை மக்கள் மதித்தது தலைமை ஆசிரியரை என்று.

இனி சோம்பித் திரியாமல்...முடிந்தவரை படிக்க ஆரம்பிப்பேன் ...உழைத்து சம்பாதிப்பேன் என்றான்....

பின்னால் தலைமை ஆசிரியர் அப்போது வர மக்களுடன் சேர்ந்து அவனும் வணக்கம் சொன்னான்.

படிப்பறிவும்,கர்வம் இல்லாமையும்,கோபம் இல்லாமையும்,உழைப்பும் ஒவ்வொருவரையும் வாழ்க்கையில் உயர்த்திவிடும்.

' கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
 புண்ணுடையர் கல்லா தவர்.'

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் என்கிறார் வள்ளுவர்.

7 comments:

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு.

மகேந்திரன் said...

கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என
அழகாக கூறி நிற்கும் அழகிய நீதிக்கதை சகோதரி.

ADHI VENKAT said...

நல்லதொரு நீதியைச் சொன்ன கதை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மகேந்திரன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி.

ஹேமா said...

நல்லதொரு நீதிக்கதை.
சின்னக்கதைதான் எவ்வளவு உண்மை !

Kanchana Radhakrishnan said...

Thanks Hema.