Friday, September 9, 2011

85 'விட்டுக் கொடுக்கும் தன்மை' (நீதிக்கதை)




ஒரு காட்டின் நடுவில் ஒரு நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்ல நதியின் மேல் ஒரு குறுகிய பாலம் மட்டுமே இருந்தது.ஒருவர் போனால் ஒருவர் எதிரே வரமுடியாது அந்த அளவு குறுகிய பாலம்.
காட்டில் இருந்த விலங்குகள் இந்த பாலத்தைக் கடந்தே நதியைக் கடந்தன.
ஒரு நாள் இரண்டு நரிகள்.ஒவ்வொன்றும் வேறு வேறு முனையில் இருந்து நதியைக் கடக்க வந்தன.
ஒரு கட்டத்தில் இரண்டும் எதிர் எதிரே நின்று மற்றதை வழி விடச் சொன்னது.
மற்ற நரிக்கு ஒரு நரி வழி விடவேண்டுமென்றால் திரும்பி கிளம்பிய முனைக்கேச் செல்லவேண்டும்.
ஆதலால்...இரண்டு நரிகளும் அதற்கு இணங்காமல் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் போட்டி இட்டு...சண்டை செய்து ...நதியில் விழுந்து மடிந்தன.
இவற்றை அடுத்தடுத்த முனைகளில் இருந்த ஆடுகள் பார்த்தன.
ஆதலால்....ஒரு ஆடு குரல் கொடுத்து மற்ற முனையிலிருந்த ஆட்டை முதலில் கடந்து வரச்செய்தது.பின்னர் குரல் கொடுத்த ஆடு அடுத்த முனைக்கு கடந்து சென்றது.
ஒற்றுமை,விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் நரிகள் உயிர்விட்டன....ஆனால் அந்த தன்மைகள் இருந்ததால் ஆடுகள் உயிர் பிழைத்தன.

No comments: