Wednesday, December 15, 2010

54-புத்திசாலி காகம் (நீதிக்கதை)


வெயில் காலம்

வெயில் மக்களை பறவைகளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது
பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அவதியுற்றன.
அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது.அது தண்ணீருக்காக அலையும் போது..ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை ஒன்றின் அடியில் கால் பாகத்திற்கு தண்ணீர் இருந்ததைப் பார்த்தது.அது, உடன் குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது.ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை.

அந்தக் காகம் புத்திசாலியானதால்..என்ன செய்வது..என யோசித்தது.

பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது.ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து..அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து..தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு.நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.