Wednesday, October 13, 2010

46 - பழுத்த இலையும் பள்ளமும்(நீதிக்கதை)

ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..
இலையுதிர் காலம் வந்தது...
மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள்
இல்லாவிடில்...அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..
அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.
பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.
மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..உடனே பள்ளம்..இலயைப் பார்த்து ..
'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.
அதற்கு அந்த இலை
'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.
மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.
நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

4 comments:

எஸ்.கே said...

அருமையான கதை! அருமையான நீதி! நன்றி!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி எஸ்.கே.

priya.r said...

பூஜை லீவ் முடிந்து கிளாசுக்கு வர லேட்டு ஆகிடுச்சு
வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் !
உதவியால் விளையும் நன்மையை புரிந்து கொண்டேன் டீச்சர்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Priya.