Sunday, March 28, 2010

13 - புத்திசாலிச் சிறுவன்




ஒரு நாள் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் ஒரு சிறுவன் உதைத்த பந்து அருகில் இருந்த மரத்தின் பொந்திற்குள் விழுந்தது.

பந்துக்கு சொந்தக்காரச் சிறுவன் அழ ஆரம்பித்தான்.

அந்தப் பந்தை பொந்திலிருந்து எப்படி எடுப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

அப்பொழுது ஒரு புத்திசாலிச் சிறுவன் அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து பொந்திற்குள் கொட்ட பந்து எழும்பி தண்ணீரின் மேல் வந்தது. அந்த பந்தை எடுத்து உரிய சிறுவனிடம் ஒப்படைத்தான்.

எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.

3 comments:

இராகவன் நைஜிரியா said...

இன்றுதான் உங்கள் வலைப்பூவை தமிழ் மணம் மூலம் அறிந்தேன்.

அருமையாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி இராகவன்

Anonymous said...

// எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம். //

நூற்றில் ஒரு வார்த்தை சொன்னீர்கள் அம்மா. தங்கள் வலைப்பூவை இன்று தான் முதன் முதலில் பார்க்கிறேன். எல்லாமே அழகு. எளிமை. நல்ல கருத்துக்கள்.

நன்றி.. தொடரட்டும் தங்கள் பணி :)