Thursday, October 30, 2014

133. அறிவுரை வழங்கும் தகுதி (நீதிக்கதை)




கடற்கரை ஓரம் நண்டு ஒன்று வசித்து வந்தது.அது தனது மகனான குட்டி நண்டை நடக்கச் சொல்லி அழகுப் பார்த்தது

ஆனால் ...குட்டி நண்டோ...நேராக நடக்க முடியாமல் தனது இடது பக்கவாட்டிலேயே நடந்தது.அதனைப் பார்த்த தாய் நண்டு ' மகனே...பக்கவாட்டில் நடக்கக்கூடாது.நேராக நடக்கவேண்டும்' என்று அறிவுரை கூறியது.

உடனே குட்டி நண்டு...' அம்மா..எவ்வளவு முயன்றும் என்னால் நேராக நடக்க முடியவில்லை.நேராக எப்படி நடப்பது என எனக்கு சொல்லிக்கொடு ' என்றது.

தாய் நண்டும்...அப்படி நடக்கப் பார்த்தது..ஆனால் அதனால் நேராக நடக்க முடியவில்லை.பக்கவாட்டிலேயே நடந்தது.
அப்போதுதான் அதற்கு....நண்டினமான தங்களால் நேராக நடக்க முடியாது என உணர்ந்தது.அது தெரியாமல் தன் மகனுக்கு அறிவுரை கூறினோமே என நாணியது.

நாமும் பிறர்க்கு ஏதேனும் அறிவுரை வழங்குமுன், நாம் அப்படி நடந்து கொண்டோமா என யோசிக்க வேண்டும்.

அறிவுரை வழங்குமுன் அதற்கேற்றார் போல நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நீதிக்கதை....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

நன்றி வெங்கட் நாகராஜ்